21 பெருநீர் அழுவத்து எந்தை தந்த
பெருநீர் அழுவத்து எந்தை தந்தகொழுமீன் உணங்கற் படுபுள் ஓப்பி, எக்கர்ப் புன்னை இன்நிழல் அசைஇ செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி, ஞாழல் ஓங்குசினைத் தொடுத்த கொடுங்கழித் தாழை வீழ்கயிற்று ஊசல் தூங்கிக், கொண்டல் இடுமணல் குரவை முனையின் வெண்தலைப் புணரி ஆயமொடு ஆடி, மணிப்பூம் பைந்தழை தைஇ, அணித்தகப் பல்பூங் கானல் அல்கினம் வருதல் கவ்வை நல்அணங்கு உற்ற, இவ்வூர், கொடிதுஅறி பெண்டிர் சொற்கொண்டு, அன்னை கடிகொண் டனளே- தோழி:- பெருந்துறை, எல்லையும் இரவும் என்னாது கல்லென வலவன் ஆய்ந்த வண்பரி, நிலவு மணல் கொட்கும்ஓர் தேர் உண்டு எனவே!