Posts

Showing posts from June, 2016

பிலிப் குறொஸ்பி

புதியனவற்றைப் பற்றிய பயம் மாற்றங்கள் ஏற்படுவதை தாமதப்படுத்துகிறது.

கென்றி சி. லிங்க்

ஒருவன் தவறுகளைச் செய்ததனால் தயங்கித் தயங்கி தாழ்ந்து போகிறான். மற்றவனோ தவறுகளையே படிக்கட்டுகளாக்கி உயர்கிறான்.

பார்பரா ஷெர்

மோசமான விமரிசனங்கள் எவ்வித அர்த்தத்தையும் கொண்டிருப்பதில்லை. அவற்றின் நோக்கம் அறிவுரை வழங்குவதோ அல்லது உதவி செய்வதோ அல்ல, அன்றி இழிவுபடுத்துவதே.

அல்பேட் ஐன்ஸ்டீன்

வெறும் கடமையுணர்வின் மூலமோ குறிக்கோளின் மூலமோ பெறுமதியான எதுவும் நிகழ்ந்துவிடுவதில்லை. மாறாக மனிதர்களிலும் கொண்ட இலட்சியத்திலும் உள்ள விசுவாசத்தினாலும் அர்ப்பணிப்பினாலுமேயாகும்.

பேர்ள் எஸ். பக்

மனமகிழ்வுடனும் முழு ஈடுபாட்டுடனும் செய்யப்படும் வேலை ஒரு அழகான அனுபவம்.

யாரோ

பள்ளியில் பாடத்தை கற்றுக்கொண்டபின் பரீட்சை எழுதுகிறோம். ஆனால் வாழ்க்கையிலோ பரீட்சையின் பின்தான் பாடம் படிக்கிறோம்.

தலாய் லாமா

நெருக்கடி மிக்க வேளைதான் அதிகூடிய அனுபவத்தையும் அறிவையும் பெற்றுக்கொள்ளும் காலம்.

எச். ஜி. வெல்ஸ்

வாழ்வின் ஒவ்வொரு கணமும் அதிசயமும் மர்மமும் நிறைந்தது என்பதை கடிகாரமும் நாட்காட்டியும் எமது கண்ணில் இருந்து மறைத்துவிட நாம் அனுமதிக்கக்கூடாது.

சாள்ஸ் பேட்

மிகவும் இருண்டிருந்தால் உன்னால் நட்சத்திரங்களின் ஒளிக்கீற்றைப் பார்க்க முடியும்.

டக்ளஸ் ஹட்

நண்பரின் சட்டைப்பையில் துவாரம் இருக்கும்போது அதில் நாணயங்களை போடுவதின் மூலம் அவருக்கு உதவி செய்ய முடியாது.

அப்துல் கலாம்

நீ சுமக்கின்ற நம்பிக்கை நீ கீழே விழும்போது உன்னை சுமக்கும்.

லால் பகதூர் சாஸ்திரி

கடினமான உழைப்பு, தெய்வ வழிபாட்டுக்கு சமம்.

எமர்சன்

உற்சாகமான உழைப்பு இல்லாது உயர் வெற்றி எதையும் சாதிக்க முடியாது.

டென்னிசன்

தன்மானம், தன்னிறைவு, தன்னடக்கம் ஆகியவை வாழ்க்கையில் தலைசிறந்த ஆற்றலைத் தரும்.

ப்ராங்க்ளின்

நம்பிக்கை எனும் கண்கொண்டு பார்க்க வேண்டுமானால், பகுத்தறிவுக் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும்.

ஸாடி

ஒரு சிறிய செயலின் மூலம் ஒரு எளிய மனதை மகிழ்ச்சிப்படுத்துவது ஆயிரம் பேர் கூடும் ஒரு பிரார்த்தனையிலும் விட மேலானது.

ரூதர்போர்ட்

சோர்ந்து விடாதீர்கள். வெற்றிக் காலத்திற்கு இன்னும் சில மைல்களே உள்ளன. நம்பிக்கையுடன் முன்னேறி செல்லுங்கள். வெற்றி நிச்சயம்.

லவல்

நாம் அறிவை விலை கொடுத்து வாங்கி விடலாம். ஆனால் உணர்ச்சி, அன்பு இவை என்றும் விற்பனைக்கு வருவதில்லை.

அப்துல் கலாம்

உலகம் உன்னை அறிவதைவிட, உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்.

ஃபிடல் காஸ்ட்ரோ

தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்.

அப்துல் கலாம்

கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே. உன்னைக் கொன்றுவிடும். கண்ணைத் திறந்து பார்; காணாமல் போய்விடும்.

சர். கோல்டன்

பல நன்மைகள் வாய்ந்த நண்பர்களின் தொடர்பை விட, தேர்ந்தெடுத்த சில புத்தகங்களின் உறவு நமக்கு அதிக நன்மையளிக்கும்.