ஊடல் உவகை (குறள் 1321 - 1330)
குறள் - 1321: இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளிக்கு மாறு. குறள் - 1322: ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும். குறள் - 1323: புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து. குறள் - 1324: புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை. குறள் - 1325: தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து. குறள் - 1326: உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. குறள் - 1327: ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். குறள் - 1328: ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. குறள் - 1329: ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. குறள் - 1330: ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்.