Posts
Showing posts from September, 2016
திருப்பள்ளியெழுச்சி
- Get link
- X
- Other Apps
போற்றியென் வாழ்முத லாகிய பொருளே புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண் டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறை உறை சிவபெருமானே ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. அருணண்இந்திரன் திசை அணுகினன் இருள்போய் அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின் கருனையின் சூரியன் எழவெழ நயனக் கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம் திரள்நிரை அருள்பதம் முரல்வன இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே. கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஓவின தாரகை ஒளியொளி உதயத்து ஓருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. இன்னிசை வீணையார் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் துவள்கையர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர்...
திருவாசகம்
- Get link
- X
- Other Apps
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய், எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரம...
திருப்பொற்சுண்ணம்
- Get link
- X
- Other Apps
முத்துநல் தாழம்பூ மாலைதூக்கி முளைக்குடந் தூபம்நல் தீபம்வைம்மின் சக்தியும் சோமியும் பார்மகளும் நாமகளோடுபல்லாண்டிசைமின் சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும் கங்கையும் வந்து கவரிகொண்மின் அத்தன் ஐயாறன்அம்மானைபாடி ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. பூவியல் வார்சடை எம்பிராற்குப் பொற்றிருச் சுண்ணம் இடிக்கவேண்டும் மாவின் வடுவகி ரன்ன கண்ணீர் வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள் கூவுமின் தொண்டர் புறநிலாமே குனிமின் தொழுமினெங் கோனெங்கூத்தன் தேவியுந் தானும்வந்தெம்மையாளச் செம்பொன்செய் சுண்ணம் இடித்துநாமே. சுந்தர நீறணந் தும்மெழுகித் தூயபொன்சிந்தி நிதிநிரப்பி இந்திரன் கற்பகம் நாட்டியெங்கும் எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின் அந்தார் கோன்அயன் தன்பெருமான் ஆழியான் நாதன்நல் வேலன்தாதை எந்தரம் ஆளுமை யாள்கொழுநற் கேய்ந்த பொற்சுண்ணம் இடித்துநாமே. காசணி மின்கள் உலக்கையெல்லாம் காம்பணி மின்கள் கறையுரலை நேசமுடைய அடியவர்கள் நின்று நிலாவுக என்றுவாழ்த்தித் தேசமெல்லாம் புகழ்ந் தாடுங் கச்சித் திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடிப் பாசவினையைப் பறிந்துநின்று பாடிப் பொற்சுண்ணம் இடித்துநாமே. அறுகெடுப்பார் அயனும்அரியும் அன்றிமற்றிந்திர னோடமர...
காமத்துப்பால்
- Get link
- X
- Other Apps
களவியல் தகையணங்குறுத்தல் குறிப்பறிதல் புணர்ச்சி மகிழ்தல் நலம் புனைந்து உரைத்தல் காதற் சிறப்பு உரைத்தல் நாணுத் துறவு உரைத்தல் அலர் அறிவுறுத்தல் கற்பியல் பிரிவாற்றாமை படர் மெலிந்து இரங்கல் கண் விதுப்பு அழிதல் பசப்பு உறு பருவரல் தனிப்படர் மிகுதி நினைந்தவர் புலம்பல் கனவு நிலை உரைத்தல் பொழுது கண்டு இரங்கல் உறுப்பு நலன் அழிதல் நெஞ்சொடு கிளத்தல் நிறை அழிதல் அவர் வயின் விதும்பல் குறிப்பு அறிவுறுத்தல் புணர்ச்சி விதும்பல் நெஞ்சொடு புலத்தல் புலவி புலவி நுணுக்கம் ஊடல் உவகை
பொருட்பால்
- Get link
- X
- Other Apps
அரசியல் இறைமாட்சி கல்வி கல்லாமை கேள்வி அறிவுடைமை குற்றம் கடிதல் பெரியாரைத் துணைக்கோடல் சிற்றினம் சேராமை தெரிந்து செயல்வகை வலி அறிதல் காலம் அறிதல் இடன் அறிதல் தெரிந்து தெளிதல் தெரிந்து வினையாடல் சுற்றம் தழால் பொச்சாவாமை செங்கோன்மை கொடுங்கோன்மை வெருவந்த செய்யாமை கண்ணோட்டம் ஒற்றாடல் ஊக்கம் உடைமை மடி இன்மை ஆள்வினை உடைமை இடுக்கண் அழியாமை அமைச்சியல் அமைச்சு சொல்வன்மை வினைத்தூய்மை வினைத்திட்பம் வினை செயல்வகை தூது மன்னரைச் சேர்ந்து ஒழுகல் குறிப்பு அறிதல் அவை அறிதல் அவை அஞ்சாமை அரணியல் நாடு அரண் கூழியல் பொருள் செயல்வகை படையியல் படைமாட்சி படைச்செருக்கு நட்பியல் நட்பு நட்பு ஆராய்தல் பழைமை தீ நட்பு கூடா நட்பு பேதைமை புல்லறிவாண்மை இகல் பகை மாட்சி பகைத்திறம் தெரிதல் உட்பகை பெரியாரைப் பிழையாமை பெண்வழிச் சேறல் வரைவில் மகளிர் கள் உண்ணாமை சூது மருந்து குடியியல் குடிமை மானம் பெருமை சான்றாண்மை பண்புடைமை நன்றியில் செல்வம் நாண் உடைமை குடி செயல்வகை உழவு நல்...
அறத்துப்பால்
- Get link
- X
- Other Apps
பாயிரம் கடவுள் வாழ்த்து வான் சிறப்பு நீத்தார் பெருமை அறன் வலியுறுத்தல் இல்லறவியல் இல்வாழ்க்கை வாழ்க்கைத் துணைநலம் மக்கட்பேறு அன்புடைமை விருந்தோம்பல் இனியவை கூறல் செய்ந்நன்றி அறிதல் நடுவுநிலைமை அடக்கம் உடைமை ஒழுக்கம் உடைமை பிறன் இல் விழையாமை பொறை உடைமை அழுக்காறாமை வெஃகாமை புறங்கூறாமை பயனில சொல்லாமை தீவினை அச்சம் ஒப்புரவு அறிதல் ஈகை புகழ் துறவறவியல் அருள் உடைமை புலால் மறுத்தல் தவம் கூடா ஒழுக்கம் கள்ளாமை வாய்மை வெகுளாமை இன்னா செய்யாமை கொல்லாமை நிலையாமை துறவு மெய் உணர்தல் அவா அறுத்தல் ஊழியல் ஊழ்
சகலகலாவல்லி மாலை
- Get link
- X
- Other Apps
வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித் துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற் காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற் குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும் தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென் நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத் தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக் கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெ...
திருவெம்பாவை
- Get link
- X
- Other Apps
பாடல் எண் : 1 ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன் ஏதேனு மாகாள் கிடந்தாள்என் னேயென்னே ஈதேஎந் தோழி பரிசேலோ ரெம்பாவாய். பொழிப்புரை : ஒளி பொருந்திய நீண்ட கண்களை உடைய பெண்ணே! முதலும் முடிவும் இல்லாத அரும் பெருஞ்சோதியை யுடைய இறைவனை நாங்கள் பாடுவதைக் கேட்டும், உறங்குகின்ற னையோ? உன் காது ஓசை புகாத வலிய காதோ? மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று, தெருவின் கண் கேட்ட அளவிலேயே, எங்கள் தோழி ஒருத்தி பொருமி அழுது, உடம்பை மறந்து மலர் நிறைந்த படுக்கையின் மீதிருந்து புரண்டு விழுந்து இந் நிலத்தே, ஒன்றுக்கும் ஆகாதவள் போல மூர்ச்சித்துக் கிடந்தாள். இஃது அவள் தன்மை என்ன வியப்பு! பாடல் எண் : 2 பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம் பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் சீசி யிவையுஞ் சிலவோ வ...
திருப்பாவை
- Get link
- X
- Other Apps
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்; நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன், ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம், கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாரா யணனே, நமக்கே பறைதருவான், பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய். வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச் செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி, நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்; செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்; ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய். ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால், தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல் உகளப் பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப, தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய். ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழிய...
கந்த சஷ்டி கவசம்
- Get link
- X
- Other Apps
காப்பு நேரிசை வெண்பா துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. குறள் வெண்பா அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி. நூல் நிலமண்டில ஆசிரியப்பா சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக! வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக! சரவண பவனார் சடுதியில் வருக ரவண பவச ர ர ர ர ர ர ர ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி விநபவ சரவண வீரா நமோநம நிபவ சரவண நிறநிற நிறென வசுர வணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வரு...
சனிக்கிழமை
- Get link
- X
- Other Apps
திருச்சிற்றம்பலம் தேவாரம் வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென் உளமே புகுந்த வதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டு முடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே திருவாசகம் பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேன் உடைய ஊனினை உருக்கி உள் ஒளி பெருக்கி உலப்பிலா ஆனந்த ஆய தேனினைச் சொரிந்த புறம் புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப்பிடித்தேன் எங்கெழுந்து அருளுவதினியே திருவிசைப்பா கடியார் கணம் புல்லர் கண்ணப்பர் என்றும் அடியார் அமர்உலகம் ஆள நீஆளாதே முடியா முத்தீ வேள்வி மூவாயிரவரொடும் குடிவாழ்க்கை கொண்டு நீ குலாவிக் கூத்தாடினையே திருப்பல்லாண்டு சொல்லாண்ட சுருதிப் பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர் சில்லாண்டிற் சிதையுஞ் சில தேவர் சிறு நெறி சேராமே வில்லாண்ட கனகத் திரண் மேருவிடங்கன் விடைப்பாகன் பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. திருப்புராணம் என்றும் இன்பம் பெருகும் இயல்பினோடு ஒன்று காதலித் துள்ளமும் ஓங்க...
வெள்ளிக்கிழமை
- Get link
- X
- Other Apps
திருச்சிற்றம்பலம் தேவாரம் பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றையணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னை உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே திருவாசகம் முத்தி நெறியறியாத மூர்க்கரொடு முயல் வேனைப் பத்தி நெறியறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம் சித்த மலம் அறிவித்துச் சிவமாக்கியெனை ஆண்ட அத்தனெனக் கருளியவாறார் பெறுவார் அச்சோவே திருவிசைப்பா நையாத மனத்தினனை நைவிப்பான் இத்தெருவே ஜயா நீ உலாப் போந்த அன்று முதல் இன்றுவரை கையாரத் தொழுதருவி கண்ணாரச் சொரிந்தாலும் செய்யாயோ அருள் கோடைத் திரைலோக்கிய சுந்தரரே. திருப்பல்லாண்டு குழலொலி யாழொலி கூத்தொலி யேத்தொலி யெங்குங் குழாம் பெருகி விழாவொலி விண்ணளவுஞ் சென்ற விம்பி மிகு திருவாரூரின் மழவிடையார்க்கு வழிவழி யாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த பழவடி யாரொடுங் கூடியெம் மானுக்கே பல்லாண்டு கூறுதுமே. திருப்புராணம் ஜந்து பேரறிவும் கண்களே கொள்ள அளப் பெருங் கரணங்கள் நான்குஞ் சிந்தையே யாகக் குணமொரு மூன்றுந் திருந்து சாத்துவிகமே யாக இந்து வாழ் சடையானாடு மானந்த எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்த பேரின்ப வெள்ளத்துள் திளை...
வியாழக்கிழமை
- Get link
- X
- Other Apps
திருச்சிற்றம்பலம் தேவாரம் காதல் ஆகிக் கசிந்து கண் நீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது வேத நான்கினும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே. திருவாசகம் சோதியே சுடரே சூழொளி விளக்கே சுரி குழற் பணை முலை மடந்தை பாதியே பரனே பால்கொள் வெண்ணீற்றாய் பங்கயத் தயனும் மால்அறியா நீதியே செல்வத் திருப்பெருந்துறையில் நிறைமலர்க் குருந்தமேவிய சீர் ஆதியே அடியேன் ஆதரித்தழைத்தால் அதெந்துவே என்றருளாயே. திருவிசைப்பா அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட அங்ஙனே பெரிய நீசிறிய என்னையாள் விரும்பி என மனம் புகுந்த எளிமையை என்றுநான் மறக்கேன் முன்னமால் அறியா வொருவனாம் இருவா முக்கணா நாற்பெருந் தடந்தோள் கன்னலே தேனே யமுதமே கங்கை கொண்ட சோளேச்சரத்தானே. திருப்பல்லாண்டு ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரை நாள் நாரயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரரும் தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்ததும் நிறைந்தும் பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே. திருப்புராணம் இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும்...
புதன்கிழமை
- Get link
- X
- Other Apps
திருச்சிற்றம்பலம் தேவாரம் மாதர்ப்பிறைக் கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப் போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவாரவர் பின் புகுவேன் யாதுஞ் சுவடு படாமல் ஜயாறடைகின்ற போது காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன் கண்டேனவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன். திருவாசகம் நானேயோ தவஞ் செய்தேன் சிவாய நம எனப்பெற்றேன் தேனாய் இன் அமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான் தானே வந்தென துள்ளம் புகுந்தடியேற்கருள் செய்தான் ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே. திருவிசைப்பா தத்தையங் கனையார் தங்கள் மேல் வைத்த தாயவை நூறாயிரம் கூறிட்டு அத்தில் அங்கு ஒரு கூறு உன் கண் வைத்தவருக்கு அமர் உலகு அளிக்கு நின் பெருமை பித்தனென் றொருகால் பேசுவரேனும் பிழைத்தவை பொறுத்து அருள் செய்யும் கைத்தலம் அடியேன் சென்னிமேல் வைத்த கங்கை கொண்ட சோளேச் சரத்தானே. திருப்பல்லாண்டு மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள் வஞ்சகர் போயகல பொன்னின் செய் மண்டபத்துள்ளே புகுந்து புவனியெல்லாம் விளங்க அன்ன நடை மடவாள் உமைகோன் அடியோமுக்கருள் புரிந்து பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்கு பல்லாண்டு கூறுதுமே திருப்புரா...
செவ்வாய்கிழமை
- Get link
- X
- Other Apps
திருச்சிற்றம்பலம் தேவாரம் சிறையாரு மடக்கிளியே இங்கேவா தேனொடுபால் முறையாலே உணத்தருவான் மொய்பவளத் தொடு தரளந் துறையாருங்கடல் தோணி புரத்தீசன் துளங்கும் இளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே திருவாசகம் பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம் பேசுவதும் திருவாயால் மறைபோலும் காணேடி பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண் டென்னை ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல் பானான் சாழலோ திருவிசைப்பா உருக்கி என் உள்ளத்துள்ளே ஊறலந்தோறல் மாறாந் திருக்குறிப்பு அருளும் தில்லைச்செல்வன் பாற்செல்லும் செல்வில் அருக்கரை அள்ளல் வாய கள்ளரை அவியாப்பாவைப் பெருக்கரைக் காணாக் கண் வாய் பேசாது அப்பேய்களோடே திருப்பல்லாண்டு மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வன்மின் கொண்டுங் கொடுத்துங் குடிகுடி ஈசற்காட்செய்மின் குழாம் புகுந்து அண்டங் கடந்த பொருள் அளவில் லதோர் ஆனந்த வெள்ளப்பொருள் பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே. திருப்புராணம் வேதநெறி தழைத் தோங்க மிகுசைவத் துறை விளங்கப் பூத பரம்பரை பொலியப் புனிதவாய் மலர்ந்தழுத சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தன் பாதம...
திங்கட்கிழமை
- Get link
- X
- Other Apps
திருச்சிற்றம்பலம் தேவாரம் தோடுடைய செவியன் விடையேறியோர் தூவென் மதிசூடிக் காடுடைய சுடலைப்பொடி பூசி என் உள்ளங்கவர் கள்வன் ஏடுடைய மலரான் முனை நாட் பணிந் தேத்த அருள் செய்த பீடுடைய பிரமா புரமேவிய பெம்மான் இவனன்றே திருவாசகம் பாரொடு விண்ணாய் பரந்த எம் பரனே பற்று நான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே திருப்பெருந்துறையுறை சிவனே ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைப்பேன் ஆண்ட நீ அருளிலை யானால் வார் கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. திருவிசைப்பா கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமா கடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்ற எம் சிவனைத் திருவீழி மிழலை வீற்றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டு கண்டு உள்ளம் குளிர என் கண் குளிர்நதனவே. திருப்பல்லாண்டு சீரும் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்றது ஆர்பெறுவார் உலகில் ஊரும் உலகும் கழற உழறி உமை மனவாளனுக்கு ஆட் பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே. திருப்புராணம் கற்பனை கடந்த சோதி கருண...
ஞாயிற்றுக் கிழமை
- Get link
- X
- Other Apps
திருச்சிற்றம்பலம் தேவாரம் குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும் பணித்த சடையும் பவளம் போல் மேனியிற் பால்வெண்ணீறும் இனித்த முடைய எடுத்த பொற்பாதமுங் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே திருவாசகம் அம்பையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே பொய்மையே பெருக்கிப் பொழுதினைச்சுருக்கும் புழுத்தலை புலையனேன் தனக்குச் செம்மையே யாய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவதினியே திருவிசைப்பா ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே தெளிவளர் பளிங்கின் திரண்மணிக் குன்றே சித்தத்துள் தித்துக்கும் தேனே அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே அம்பலம் ஆடரங்காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத் தொண்டனேன் விளம்புமா விளம்பே. திருப்பல்லாண்டு பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லை தன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழுகின்ற தில்லைச் சிற்றம்பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயில வல்லானுக்குகே பல்லாண்டு கூறுதுமே. த...
விநாயகர் காரியசித்தி மாலை
- Get link
- X
- Other Apps

பந்தம் அகற்றும் அனந்தகுணப் பரப்பம் எவன்பால் உதிக்குமோ எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ சந்தமறை ஆகமங்கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம். உலகம் முழுதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும் பொருள்எவன் அவ் உலகில் பிறக்கும் விகாரங்கள் உறாத மேலாம் ஒளியாவன் உலகம் புரியும் வினைப்பயனை ஊட்டும் களைக்கண் எவன் அந்த உலக முதலாம் கணபதியை உவந்தே சரணம் அடைகின்றோம். இடர்கள் முழுவதும் எவன் அருளால் எரிவீழும் பஞ்சென மாயும் தொடரும் உயிர்கள் எவன் அருளால் சுடர் வாழ் பதியும் உறச் செய்யும் கடவுள் முதலோர்க் கூறின்றிக் கருமம் எவனால் முடிவுறும் அத் தடவு மருப்புக் கணபதி பொன் சரணம் சரணம் அடைகின்றோம். மூர்த்தி ஆகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான தீர்த்தம் ஆகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம் ஆர்த்தி நாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப் போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம். செய்யும் வினையின் முதல் யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன் ஜயம் இன்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன் உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப் ப...