Posts

Showing posts from November, 2016

21 பெருநீர் அழுவத்து எந்தை தந்த

பெருநீர் அழுவத்து எந்தை தந்தகொழுமீன் உணங்கற் படுபுள் ஓப்பி, எக்கர்ப் புன்னை இன்நிழல் அசைஇ செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி, ஞாழல் ஓங்குசினைத் தொடுத்த கொடுங்கழித் தாழை வீழ்கயிற்று ஊசல் தூங்கிக், கொண்டல் இடுமணல் குரவை முனையின் வெண்தலைப் புணரி ஆயமொடு ஆடி, மணிப்பூம் பைந்தழை தைஇ, அணித்தகப் பல்பூங் கானல் அல்கினம் வருதல் கவ்வை நல்அணங்கு உற்ற, இவ்வூர், கொடிதுஅறி பெண்டிர் சொற்கொண்டு, அன்னை கடிகொண் டனளே- தோழி:- பெருந்துறை, எல்லையும் இரவும் என்னாது கல்லென வலவன் ஆய்ந்த வண்பரி, நிலவு மணல் கொட்கும்ஓர் தேர் உண்டு எனவே!

அன்றுஅவண் ஒழிந்தன்றும் இலையே; வந்துநனி

அன்றுஅவண் ஒழிந்தன்றும் இலையே; வந்துநனிவருந்தினை- வாழி, என் நெஞ்சே!- பருந்து இருந்து உயாவிளி பயிற்றும், யாஉயர் நனந்தலை, உருள்துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும் கடுங்குரற் குடிஞைய நெடும்பெருங் குன்றம், எம்மொடு இறத்தலும் செல்லாய்; பின்நின்று, ஒழியச் சூழ்ந்தனை ஆயின், தவிராது, செல்இனி; சிறக்க நின் உள்ளம்! வல்லே மறவல் ஓம்புமதி; எம்மே - நறவின் சேயிதழ் அனைய ஆகிக், குவளை மாஇதழ் புரையும் மலிர்கொள் ஈர்இமை, உள்ளகம் கனல உள்ளுதொறு உலறி, பழங்கண் கொண்ட, கதழ்ந்துவீழ், அவிர்அறல் வெய்ய உகுதர, வெரீஇப், பையென, சில்வளை சொரிந்த மெல்இறை முன்கை பூவீழ் கொடியின் புல்லெனப் போகி; அடர்செய் ஆய்அகல் சுடர் துணை ஆக, இயங்காது வதிந்த நம் காதலி உயங்குசாய் சிறுபுறம் முயங்கிய பின்னே!

நீர்நிறம் கரப்ப ஊழுறுபு உதிர்ந்து

நீர்நிறம் கரப்ப ஊழுறுபு உதிர்ந்து,பூமலர் கஞலிய கடுவரற் கான்யாற்று, கராஅம் துஞ்சும் கல்உயர் மறிசுழி, மராஅ யானை மதம்தப ஒற்றி, உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம்- கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து, நாம அருந்துறைப் பேர்தந்து, யாமத்து ஈங்கும் வருபவோ?- ஓங்கல் வெற்ப!- ஒருநாள் விழுமம் உறினும், வழிநாள், வாழ்குவள் அல்லள், என் தோழி; யாவதும் ஊறுஇல் வழிகளும் பயுஇன்று ஆக இழுக்குவர், அதனால், உலமரல் வருத்தம் உறுதும், எம் படப்பைக் கொடுந்தேன் இழைத்த கோடுஉயர் நெடுவரை, பழம்தூங்கு நளிப்பிற் காந்தள்அம் பொதும்பில், பகல்நீ வரினும் புணர்குவை - அகல்மலை வாங்குஅமைக் கண்இடை கடுப்ப, யாய் ஓம்பினள் எடுத்த, தடமென் தோளே

வளம்கெழு திருநகர்ப் பந்து சிறிது எறியினும்

வளம்கெழு திருநகர்ப் பந்து சிறிது எறியினும்இளந்துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும், 'உயங்கின்று, அன்னை! என்மெய்' என்று அசைஇ, மயங்கு வியர் பொறித்த நுதலள், தண்ணென, முயங்கினள் வதியும் மன்னே! இனியே, தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள், நெடுமொழித் தந்தை அருங்கடி நீவி, நொதும லாளன் நெஞ்சுஅறப் பெற்றஎன் சிறுமுதுக் குறைவி சிலம்புஆர் சீறுடி வல்லகொல், செல்லத் தாமே- கல்லென- ஊர்எழுந் தன்ன உருகெழு செலவின், நீர்இல் அத்தத்து ஆர்இடை, மடுத்த, கொடுங்கோல் உமணர், பகடுதெழி தெள்விளி நெடும்பெருங் குன்றத்து இமிழ்கொள இயம்பும், கடுங்கதிர் திருகிய வேய்பயில் பிறங்கல், பெருங்களிறு உரிஞ்சிய மண் அரை யாஅத்து அருஞ்சுரக் கவலைய அதர்படு மருங்கின், நீள்அரை இலவத்து ஊழ்கழி பல்மலர், விழவுத் தலைக்கொண்ட பழவிறல் மூதூர் நெய்உமிழ் சுடரின் கால்பொரச் சில்கி, வைகுறு மீனின் தோன்றும் மைபடு மாமலை விலங்கிய சுரனே!

நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத்

நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத்தாதின் அல்லி அவிர் இதழ் புரையும், மாசுஇல் அங்கை, மணிமருள் அவ்வாய் நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல், யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத் தேர்வழங்கு தெருவில் தமியோற் கண்டே, கூர்எயிற்று அரிவை குறுகினள்; யாவரும் காணுநர் இன்மையின், செத்தனள் பேணிப் பொலங்கலம் சுமந்த பூண்தாங்கு இளமுலை, 'வருக மாள, என் உயிர்!' எனப் பெரிது உவந்து கொண்டனள் நின்றோட் கண்டு, நிலைச் செல்லேன், 'மாசுஇல் குறுமகள்!' எவன் பேதுற்றனை? நீயும் தாயை இவற்கு?' என யான்தற் கரைய, வந்து விரைவனென் கவைஇ, களவு உடம்படுநரின் கவிழ்ந்து, நிலம்கிளையா, நாணி நின்றோள் நிலை கண்டு, யானும் பேணினென் அல்லெனோ- மகிழ்ந!- வானத்து அணங்குஅருங் கடவுள் அன்னோள், நின் மகன்தாய் ஆதல் புரைவது - ஆங்கு எனவே!

எம்வெங் காமம் இயைவது ஆயின்

எம்வெங் காமம் இயைவது ஆயின்மெய்ம்மலி பெரும்பூண், செம்மற் கோசர் கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த பாகல் ஆர்கைப் பறைக்கட் பீலித் தோகைக் காவின் துளுநாட்டு அன்ன, வறுங்கை வம்பலர் தாங்கும் பண்பின் செறிந்த சேரிச் செம்மல் மூதூர், அறிந்த மாக்கட்டு ஆகுக தில்ல- தோழி மாரும் யானும் புலம்பச், சூழி யானைச் சுடர்ப்பூண் நன்னன் பாழி அன்ன கடியுடை வியன்நகர்ச் செறிந்த காப்புஇகந்து, அவனொடு போகி, அத்த இருப்பை ஆர்கழல் புதுப்பூத் துய்த்த வாய, துகள்நிலம் பரக்க, கொன்றை யம்சினைக் குழற்பழம் கொழுதி, வன்கை எண்கின் வயநிரை பரக்கும்- இன்துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்குக், குன்ற வேயின் திரண்ட என் மென்தோள் அஞ்ஞை சென்ற- ஆறே!

அரக்கத்து அன்ன செந்நிலப் பெருவழி

அரக்கத்து அன்ன செந்நிலப் பெருவழிகாயாஞ் செம்மல் தாஅய், பலஉடன் ஈயல் மூதாய் வரிப்பப், பவளமொடு மணி மிடைந்தன்ன குன்றம் கவைஇய அம்காட்டு ஆர்இடை, மடப்பிணை தழீஇத், திரி மருப்பு இரலை புல்அருந்து உகள, முல்லை வியன்புலம் பரப்பிக் கோவலர் குறும்பொறை மருங்கின் நறும்பூ அயரப் பதவு மேயல் அருந்து மதவுநடை நல்ஆன் வீங்குமாண் செருத்தல், தீம்பால் பிலிற்ற கன்றுபயிர் குரல, மன்றுநிறை புகுதரும் மாலையும் உள்ளார் ஆயின், காலை யாங்கு ஆகுவம் கொல்? பாண!" என்ற மனையோள் சொல்எதிர் சொல்லல் செல்லேன், செவ்வழி நல்யாழ் இசையினென், பையெனக் கடவுள் வாழ்த்திப் பையுள் மெய்ந் நிறுத்து, அவர்திறம் செல்வேன் கண்டனென், யானே- விடுவிசைக் குதிரை விலங்குபரி முடுகக் கல்பொருது இரங்கும் பல்ஆர் நேமிக் கார்மழை முழக்குஇசை கடுக்கும், முனைநல் ஊரன், புனைநெடுந் தேரே!

தன்கடற் பிறந்த முத்தின் ஆரமும்

தன்கடற் பிறந்த முத்தின் ஆரமும்முனைதிரை கொடுக்கும் துப்பின், தன்மலைத் தெறல் அருமரபின் கடவுட் பேணிக் குறவர் தந்த சந்தின் ஆரமும், இருபேர் ஆரமும் எழில்பெற அணியும் திருவீழ் மார்பின் தென்னவன் மறவன் - குழியில் கொண்ட மராஅ யானை மொழியின் உணர்த்தும் சிறுவரை அல்லது, வரைநிலை இன்றி இரவலர்க்கு ஈயும், வள்வாய் அம்பின் கோடைப் பொருநன்- பண்ணி தைஇய பயம்கெழு வேள்வியின், விழுமிது நிகழ்விது ஆயினும்- தெற்குஏர்பு, கழிமழை பொழிந்த பொழுதுகொள் அமையத்துச், சாயல் இன்துணை இவட்பிரிந்து உறையின், நோய் இன்றாக செய்பொருள்! வயிற்பட மாசுஇல் தூமடி விரிந்த சேக்கை, கவவுஇன் புறாமைக் கழிக- வள வயல், அழல்நுதி அன்ன தோகை ஈன்ற கழனி நெல்லின் கவைமுதல் அலங்கல் நிரம்புஅகன் செறுவில் வரம்பு அணையாத் துயல்வரப், புலம்பொடு வந்த பொழுதுகொள் வாடை, இலங்குபூங் கரும்பின் ஏர்கழை இருந்த வெண்குருகு நரல, வீசும் நுண்பல் துவலைய தண்பனி நாளே!

யாயே கண்ணினும் கடுங் காதலளே

யாயே கண்ணினும் கடுங் காதலளேஎந்தையும், நிலன்உரப் பொறாஅன்; 'சீறுடி சிவப்ப, எவன், இல! குறுமகள்! இயங்குதி! என்னும்;' யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின், இருதலைப் புள்ளின் ஓர் உயிரம்மே; ஏனல்அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும் கிளிவிளி பயிற்றும் வெளில்ஆடு பெருஞ்சினை விழுக்கோட் பலவின் பழுப்பயம் கொண்மார், குறவர் ஊன்றிய குரம்பை புதைய, வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம் புலிசெத்து, வெரீஇய புகர்முக வேழம், மழைபடு சிலம்பில் கழைபடப் பெயரும் நல்வரை நாட! நீ வரின், மெல்லியல் ஓரும் தான் வாழலளே

வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம்

வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம்நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் அங்காட்டு, இலையில மலர்ந்த முகையில் இலவம் கலிகொள் ஆயம் மலிபுதொகுபு எடுத்த அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி, கயந்துகள் ஆகிய பயம்தபு கானம் எம்மொடு கழிந்தனர் ஆயின், கம்மென, வம்புவிரித் தன்ன பொங்குமணற் கானயாற்றுப், படுசினை தாழ்ந்த பயிலிணர் எக்கர், மெய்புகுவு அன்ன கைகவர் முயக்கம் அவரும் பெறுகுவர் மன்னே! நயவர, நீர்வார் நிகர்மலர் கடுப்ப, ஓ மறந்து அறுகுளம் நிறைக்குந போல, அல்கலும் அழுதல் மேவல வாகிப் பழிதீர் கண்ணும் படுகுவ மன்னே!

வான்கடற் பரப்பில் தூவற்கு எதிரிய

வான்கடற் பரப்பில் தூவற்கு எதிரியமீன்கண் டன்ன மெல்லரும்பு ஊழ்த்த, முடவுமுதிர் புன்னைத் தடவுநிலை மாச்சினை, புள்ளிறை கூரும் மெல்லம் புலம்ப! நெய்தல் உண்கண் பைதல கலுழப் பிரிதல் எண்ணினை ஆயின், நன்றும், அரிது துற்றனையால். பெரும!- உரிதினின் கொண்டு ஆங்குப் பெயர்தல்வேண்டும்- கொண்டலொடு குரூஉத்திரைப் புணரி உடைதரும் எக்கர்ப் பழந்திமில் கொன்ற புதுவலைப் பரதவர் மோட்டுமணல் அடைகரைக் கோட்டுமீன் கொண்டி, மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும் வளங்கெழு தொண்டி அன்ன இவள் நலனே

கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறு புழுகின்

கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறு புழுகின்,வில்லோர் தூணி வீங்கப் பெய்த அம்புநுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை செய்படர் அன்ன செங்குழை அகந்தோறு, இழுதின் அன்ன தீம்புழல் துய்வாய் உழுதுகாண் துளைய வாகி, ஆர்கழல்பு ஆலி வானிற் காலொடு பாறித், துப்பின் அன்ன செங்கோட்டு இயவின், நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும் அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்- கொடுநுண் ஓதி மகளிர் ஓக்கிய தொடிமாண் உலக்கைத் தூண்டுரல் பாணி நெடுமால் வரைய குடிஞையோடு இரட்டும் குன்றுபின் ஒழியப் போகி, உரந்துரந்து, ஞாயிறு படினும், 'ஊர் சேய்த்து' எனாது, துனைபரி துரக்கும் துஞ்சா செலவின் எம்மினும், விரைந்து வல்எய்திப் பல்மாண் ஓங்கிய நல்லில் ஒரு சிறை நிலைஇ, பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக் கன்றுபுகு மாலை நின்றோள் எய்தி, கைகவியாச் சென்று, கண் புதையாக் குறுகி, பிடிக்கை அன்ன பின்னகம் தீண்டி, தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ- நாணொடு மிடைந்த கற்பின், வாணுதல், அம் தீம் கிளவிக் குறுமகள் மென்தோள் பெறநசைஇச் சென்றவென் நெஞ்சே?

ஈயற் புற்றத்து ஈர்ம்புறத்து இறுத்த

ஈயற் புற்றத்து ஈர்ம்புறத்து இறுத்தகுரும்பி வல்சிப் பெருங்கை ஏற்றைக் தூங்குதோல் துதிய வள்உகிர் கதுவலின், பாம்பு மதன்அழியும் பானாட் கங்குலும், அரிய அல்ல-மன் இகுளை! 'பெரிய கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றைப் பலாவமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும் கழை நரல் சிலம்பின் ஆங்கண், வழையொடு வாழை ஓங்கிய தாழ்கண் அசும்பில், படுகடுங் களிற்றின் வருத்தம் சொலியப் பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல் விண்தோய் விடரகத்து இயம்பும் அவர் நாட்டு, எண்ணரும் பிறங்கல் மானதர் மயங்காது, மின்னுவிடச் சிறிய ஒதுங்கி, மென்மெலத் துளிதலைத் தலைஇய மணியேர் ஐம்பால் சிறுபுறம் புதைய வாரி, குரல் பிழியூஉ நெறிகெட விலக்கிய, நீயிர், இச் சுரம் அறிதலும் அறிதிரோ?' என்னுநர்ப் பெறினே

முலைமுகம் செய்தன; முள்ளெயிறு இலங்கின

முலைமுகம் செய்தன; முள்ளெயிறு இலங்கின;தலைமுடி சான்று; தண்தழை உடையை; அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்; மூப்புடை முதுபதி தாக்கு அணங்கு உடைய; காப்பும் பூண்டிசின்; கடையும் போகலை; பேதை அல்லை - மேதையம் குறுமகள்! பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை, புறத்து என, ஒண்சுடர் நல்லில் அருங்கடி நீவி, தன்சிதைவு அறிதல் அஞ்சி-இன்சிலை ஏறுடை இனத்த, நாறு உயிர் நவ்வி!- வலைகாண் பிணையின் போகி, ஈங்கு ஓர் தொலைவில் வெள்வேல் விடலையொடு, என் மகள் இச் சுரம் படர்தந் தோளே; ஆயிடை, அத்தக் கள்வர் ஆதொழு அறுத்தென, பிற்படு பூசலின் வழிவழி ஓடி மெய்த்தலைப் படுதல் செல்லேன், இத்தலை, நின்னொடு வினவல் கேளாய்;- பொன்னொடு புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி, ஒலிக்குழைச் செயலை உடைமாண் அல்குல், ஆய்சுளைப் பலவின் மேய்கலை உதிர்த்த துய்த்தலை வெண்காழ் பெறூஉம் கல்கெழு சிறுகுடிக் கானவன் மகளே

அரிபெய் சிலம்பின் ஆம்பலந் தொடலை

அரிபெய் சிலம்பின் ஆம்பலந் தொடலைஅரம்போழ் அவ்வளைப் பொலிந்த முன்கை, இழையணி பணைத்தோள், ஐயை தந்தை, மழைவளம் தரூஉம் மாவண் தித்தன் பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண்- கழைநிலை பெறாஅக் காவிரி நீத்தம், குழைமாண் ஒள்ளிழை நீ வெய் யோளொடு, வேழ வெண்புணை தழீஇப், பூழியர் கயம்நாடு யானையின் முகனமர்ந் தாங்கு, ஏந்தெழில் ஆகத்து பூந்தார் குழைய, நெருநல் ஆடினை புனலே ; இன்று வந்து 'ஆக வனமுலை அரும்பிய சுணங்கின், மாசில் கற்பின், புதல்வன் தாய்' என, மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம் முதுமை எள்ளல்; அஃது அமைகும் தில்ல! சுடர்ப்பூந் தாமரை நீர்முதிர் பழனத்து அம்தூம்பு வள்ளை ஆய்கொடி மயக்கி, வாளை மேய்ந்த வள்ளெயிற்று நீர்நாய், முள்ளரைப் பிரம்பின் மூதரில் செறியும், பல்வேல் மத்தி, கழாஅர் அன்ன எம் இளமை சென்று தவத்தொல் லஃதே; இனிமைஎவன் செய்வது, பொய்ம்மொழி, எமக்கே?

அளிநிலை பொறா அது அமரிய முகத்தள்

அளிநிலை பொறா அது அமரிய முகத்தள்விளிநிலை கொள்ளாள், தமியள், மென்மெல, நலமிகு சேவடி நிலம்வடுக் கொளா அக் குறுக வந்துதன் கூர்எயிறு தோன்ற வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள் கண்ணிய துணரா அளவை, ஒண்ணுதல், வினைதலைப் படுதல் செல்லா நினைவுடன் முளிந்த ஓமை முதையலம் காட்டுப், பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி, மோட்டிரும் பாறை ஈட்டுவட்டு ஏய்ப்ப, உதிர்வன படூஉம் கதிர்தெறு கவாஅன், மாய்த்த போல மழுகுநுனை தோற்றி, பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல். விரல்நுதி சிதைக்கும் நிரைநிலை அதர, பரல்முரம்பு ஆகிய பயம்இல் கானம் இறப்ப எண்ணுதிர் ஆயின் - 'அறத்தாறு அன்று' என மொழிந்த தொன்றுபடு கிளவி அன்ன ஆக என்னுநள் போல, முன்னம் காட்டி, முகத்தின் உரையா ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு, ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன்தலைத் தூநீர் பயந்த துணையமை பிணையல் மோயினள் உயிர்த்த காலை, மாமலர் மணிஉரு இழந்த அணியழி தோற்றம் கண்டு கடிந்தனம், செலவே - ஒண்டொடி உழையம் ஆகவும் இனைவோள் பிழையலள் மாதோ, பிரிதும் நாம் எனினே

முல்லை வைந்நுனை தோன்ற இல்லமொடு

முல்லை வைந்நுனை தோன்ற இல்லமொடுபைங்காற் கொன்றை மெல்பிணி அவிழ, இரும்பு திரித்தன்ன மாஇரு மருப்பின், பரலவல் அடைய, இரலை தெறிப்ப, மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்ப, கருவி வானம் கதழுறை சிதறிக் கார்செய் தன்றே, கவின் பெறு கானம்; குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி, நரம்பு ஆர்த்தன்ன, வாங்குவள்பு அரிய, பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த தாதுண் பறவை பேதுறல் அஞ்சி, மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன், உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன், கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது, நெடும்பெருங் குன்றத்து அமன்ற காந்தட் போதவிழ் அலரின் நாறும்- ஆய்தொடி அரிவை! - நின் மாணலம் படர்ந்தே

இருங்கழி முதலை மேஎந்தோல் அன்ன

இருங்கழி முதலை மேஎந்தோல் அன்னகருங்கால் ஓமைக் காண்பின் பெருஞ்சினை கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட, கொடுவாய்ப் பேடைக்கு அல்கிரை தரீஇய மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை- வான்தோய் சிமைய விறல்வரைக் கவா அன், துளங்குநடை மரையா வலம்படத் தொலைச்சி, ஒண்செங் குருதி உவற்றியுண்டு அருந்துபு; புலவுப்புலி துறந்த கலவுக்கழிக் கடுமுடை கொள்ளை மாந்தரின்- ஆனாது கவரும் புல்லிலை மராஅத்த அகல்சேண் அத்தம், கலந்தரல் உள்ளமொடு கழியக் காட்டிப் பின்நின்று துரக்கும் நெஞ்சம் நின்வாய் வாய்போற் பொய்ம்மொழி எவ்வமென் களைமா- கவிரிதழ் அன்ன காண்பின் செவ்வாய், அந்தீங் கிளவி, ஆயிழை மடந்தை கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம் நெடுஞ்சேண் ஆரிடை விலங்கும் ஞா஡ன்றே?

கோழிலை வாழைக் கோள்முதிர் பெருங்குலை

கோழிலை வாழைக் கோள்முதிர் பெருங்குலைஊழுறு தீங்கனி, உண்ணுநர்த் தடுத்த சாரற் பலவின் சுளையொடு, ஊழ்படு பாறை நெடுஞ்சுனை, விளைந்த தேறல் அறியாது உண்ட கடுவன் அயலது கறிவளர் சாந்தம் ஏறல் செல்லாது, நறுவீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும் குறியா இன்பம், எளிதின், நின் மலைப் பல்வேறு விலங்கும், எய்தும் நாட! குறித்த இன்பம் நினக்கெவன் அரிய? வெறுத்த ஏஎர், வேய்புரை பணைத் தோள், நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு இவளும், இனையள் ஆயின், தந்தை அருங்கடிக் காவலர் சோர்பதன் ஒற்றிக் கங்குல் வருதலும் உரியை; பைம்புதல் வேங்கையும் ஒள்ளிணர் விரிந்தன; நெடுவெண் திங்களும் ஊர்கொண் டன்றே!

வண்டுபடத் ததைந்த கண்ணி ஒண்கழல்

வண்டுபடத் ததைந்த கண்ணி ஒண்கழல்,உருவக் குதிரை மழவர் ஓட்டிய முருகன் நற்போர் நெடுவேள் ஆவி, அறுகோட்டு யானைப் பொதினி யாங்கண், சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய கல்போற் பிரியலம் என்ற சொல்தாம் மறந்தனர் கொல்லோ - தோழி!-சிறந்த வேய்மருள் பணைத்தோள் நெகிழச் சேய் நாட்டுப் பொலங்கல வெறுக்கை தருமார்-நிலம்பக அழல்போல் வெங்கதிர் பைதறத் தெறுதலின், நிழல் தேய்ந்து உலறிய மரத்த; அறை காய்பு, அறுநீர்ப் பைஞ்சுனை ஆமறப் புலர்தலின் உகுநெல் பொரியும் வெம்மைய; யாவரும் வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடிய சுரம்புல் லென்ற ஆற்ற; அலங்கு சினை நாரில் முருங்கை நவிரல் வான்பூச் சூரலம் கடுவளி எடுப்ப, ஆருற்று, உடைதிரைப் பிதிர்வின் பொங்கி, முன் கடல்போல் தோன்றல - காடு இறந்தோரோ?

கார்விரி கொன்றைப் பொன்னேர் புது மலர்த்

கார்விரி கொன்றைப் பொன்னேர் புது மலர்த்தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்; மார்பி னஃதே மை இல் நுண்ஞாண்; நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டுக், கையது கணிச்சியொடு மழுவே ; மூவாய் வேலும் உண்டு அத் தோலா தோற்கே; ஊர்ந்தது ஏறே ; சேர்ந்தோள் உமையே- செவ்வான் அன்ன மேனி, அவ்வான் இலங்குபிறை அன்ன விலங்குவால் வைஎயிற்று, எரியகைந் தன்ன அவிர்ந்து விளங்கு புரிசடை, முதிராத் திங்களொடு சுடரும் சென்னி, மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் அறியாத் தொன்முறை மரபின், வரிகிளர் வயமான் உரிவை தைஇய, யாழ்கெழு மணிமிடற்று, அந்தணன் தாவில் தாள்நிழல் தவிர்ந்தன்றால் உலகே

அகநானூறு

அகநானூறு அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் இதில் நானூறு பாடல்கள் அடங்கியுள்ளதால் இது அகநானூறு என வழங்கப்படுகிறது. இது பல்வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும். இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் மிகக் குறைந்த அளவாகப் 13 அடிகளையும், கூடிய அளவு 31 அடிகளையும் கொண்டு அமைந்துள்ளன. அகத் த்தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை, 'நெடுந்தொகை' என்றும் கூறுவர்.  இத் தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார். இத் தொகை பாடிய புலவர்கள் நூற்று நாற்பத்தைவர். அகநானூற்றுப் புலவர்கள் 146 பேர். அவர்களுள் 65 பேர் அகநானூற்றில் மட்டுமே பாடல் பாடியுள்ளார்கள். நாடாள்வோர், அந்தணர், இடையர், எயினர், பொற்கொல்லர், வணிகர், வேளாளர் எனப் பல தரப்பினர் புலவர்களாக இருந்த செய்தி அவர் தம் பெயர்களின் முன்னால் அமையும் அடைமொழிகளால் தெரிகிறது. மூன்று பாடல்களின் (114, 117, 165) ஆசிரியர் பெயர் காணப் பெறவில்லை. கடவுள் வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன.இவை களிற்றியானை நி...

சீனப்பழமொழி

நூறுபேர்கள் சேர்ந்து ஒரு முகாம் அமைக்கலாம். ஆனால் ஓர் இல்லத்தை இல்லமாக்க ஒரு பெண் வேண்டும்.

கொன்றைப் பூவின் பசந்த உண்கண்

கொன்றைப் பூவின் பசந்த உண்கண் குன்றக நெடுஞ்சுனைக் குவளை போலத் தொல்கவின் பெற்றன இவட்கே வெல்போர் வியன்நெடும் பாசறை நீடிய வயமான் தோன்றல்நீ வந்த மாறே.

பிடவம் மலரத் தளவம் நனையக்

பிடவம் மலரத் தளவம் நனையக் கார்கவின் கொண்ட கானம் காணின் வருந்துவள் பெரிதென அரும்தொழிற்கு அகலாது வந்தனர் ஆல்நம் காதலர் அம்தீம் கிளவிநின் ஆய்நலம் கொண்டே.

தோள்கவின் எய்தின தொடிநிலை நின்றன

தோள்கவின் எய்தின தொடிநிலை நின்றன நீள்வரி நெடுங்கண் வாள்வனப்பு உற்றன வேந்துகோட்டு யானை வேந்துதொழில் விட்டென விரைசெலல் நெடுந்தேர் கடைஇ வரையக நாடன் வந்த மாறே.

குறும்பல் கோதை கொன்றை மலர

குறும்பல் கோதை கொன்றை மலர நெடுஞ்செம் புற்றம் ஈயல் பகர மாபசி மறுப்பக் கார்தொடங் கின்றே பேரியல் அரிவைநின் உள்ளிப் போர்வெம் குருசில் வந்த மாறே.

மாபுதல் சேர வரகு இணர் சிறப்ப

மாபுதல் சேர வரகு இணர் சிறப்ப மாமலி புலம்பக் கார்கலித்து அலைப்பப் பேரமர்க்கண்ணி நின்பிரிந்து உறைநர் தோள்துணை யாக வந்தனர் போதுஅவிழ் கூந்தலும் பூவிரும் புகவே.

செந்ந்நில மருங்கின் பல்மலர் தாஅய்ப்

செந்ந்நில மருங்கின் பல்மலர் தாஅய்ப் புலம்தீர்ந்து இனிய வாயின புறவே பின்னிருங் கூந்தல் நன்னலம் புனைய உள்ளுதொறும் கவிழும் நெஞ்சமொடு முளெயிற்று அரிவையாம் வந்த ஆறே.

வண்டுதாது ஊதத் தேரை தெவிட்டத்

வண்டுதாது ஊதத் தேரை தெவிட்டத் தண்கமழ் புறவின் முல்லிஅ மலர இன்புறுத் தன்று பொழுதே நின்குறை வாய்த்தனம் திர்கினிப் படரே.

ஏறுமுதண் சிறப்ப ஏறெதிர் இரங்க

ஏறுமுதண் சிறப்ப ஏறெதிர் இரங்க மாதர் மான்பிணை மறியொடு மறுகக் கார்தொடங் கின்றே காலை நேரிறை முன்கைநின் உள்ளியாம் வரவே.

நின்னே போலும் மஞ்ஞை ஆலநின்

நின்னே போலும் மஞ்ஞை ஆலநின் நன்னுதல் நாறும் முல்லை மலர நின்னே போல மாமருண்டு நோக்க நின்னே உள்ளி வந்தனென் ந்ன்னுதல் அரிவை காரினும் விரைந்தே.

காரெதிர் காலையாம் ஓவின்று நலிய

காரெதிர் காலையாம் ஓவின்று நலிய நொந்துநொந்து உயவும் உள்ளமொடு வம்தனெம் மடந்தைநின் ஏர்தர விரைந்தே.

அம்தீம் கிளவி தான்தர எம்வயின்

அம்தீம் கிளவி தான்தர எம்வயின் வந்தன்று மாதோ காரே ஆவயின் ஆய்த்தொடி அரும்படர் தீர ஆய்மணி நெடுந்தேர் கடவுமதி விரைந்தே.

அம்சிரை வண்டின் அரியினம் மொய்ப்ப

அம்சிரை வண்டின் அரியினம் மொய்ப்ப மெண்புல முல்லை மலரும்மாலைப் பையுள் நெஞ்சின் தையல் உவப்ப நுண்புரி வண்கயிறு இயக்கிநின் வண்பரி நெடுந்தேர் கடவுமதி விரைந்தே.

கருவி வானம் பெயல் தொடங்கின்றே

கருவி வானம் பெயல் தொடங்கின்றே பெருவிறல் காதலி கருதும் பொழுதே விரிஉளை நன்மாப் பூட்டிப் பருவரல் தீரக் கடவுமதி தேரெ.

இதுமன் பிரிந்தோர் உள்ளும் பொழுதே

இதுமன் பிரிந்தோர் உள்ளும் பொழுதே செறிதொடி உள்ளம் உவப்ப மதியுடை வலவ ஏமதி தேரே.

பெரும்புன் மாலை ஆனது நினைஇ

பெரும்புன் மாலை ஆனது நினைஇ அரும்படர் உழைத்தல் யாவது என்றும் புல்லி ஆற்றாப் புரையோள் காண வன்புதெரிந்து ஊர்மதி வலவநின் புள்ளியல் கலைமாப் பூண்டதேரே.

அரும்படர் அவலம் அவளும் தீரப்

அரும்படர் அவலம் அவளும் தீரப் பெருந்தோள் நலம்வர யாமும் முயங்க ஏமதி வலவ தேரே மாருண்டு உகளும் மலரணிப் புறவே.

வேனில் நீங்கக் கார்மழை தலைஇக்

வேனில் நீங்கக் கார்மழை தலைஇக் காடுகவின் கொண்டன்று பொழுது பாடுசிறந்து கடியக் கடவுமதி பாக நெடிய நீடினம் நேரிழை மறந்தே.

ஆறுவனப்பு எய்த அலர்தா யினவே

ஆறுவனப்பு எய்த அலர்தா யினவே வேந்துவிட் டனனே மாவிரைந் தனவே முன்னுறக் கடவுமதி பாக நன்னுதல் அரிவை தன்னலம் பெறவே.

தெரியிழை அரிவைக்குப் பெருவிருந் தாக

தெரியிழை அரிவைக்குப் பெருவிருந் தாக வல்விரைத்து கடவுமதி பாகவெள்வேல் வென்றடு தானை வேந்தனொடு நாளிடைச் சேப்பின் ஊழியின் நெடிதே.

சாய்இறைப் பணைத்தோள் அவ்வரி அல்குல்

சாய்இறைப் பணைத்தோள் அவ்வரி அல்குல் சேயிழை மாதரை உள்ளி நோய்விட முள் இட்டு ஊர்மதி வலவநின் புன்இயல் கலிமாப் பூண்ட தேரே.

நினக்குயாம் பாணரும் அல்லேம் எமக்கு

நினக்குயாம் பாணரும் அல்லேம் எமக்கு நீயும் குருசிலை யல்லை மாதோ நின்வெம் காதலி தனிமனைப் புலம்பி ஈரிதழ் உண்கண் உகுத்த பூசல் கேட்டு மருளா தோயே.

சொல்லுமதி மாண சொல்லுதோறு இனிய

சொல்லுமதி மாண சொல்லுதோறு இனிய நாடிடை விலங்கிய எம்வயின் நாள்தொறும் அரும்பனி கலந்த அருளில் வாடை தனிமை எள்ளும் பொழுதில் பனிமலர்க் கண்ணி கூறியது எமக்கே.

நீடினம் என்று கொடுமை தூற்றி

நீடினம் என்று கொடுமை தூற்றி வாடிய நுதல ளாகிப் பிறிதுநினைந்து யாம்வெம் காதலி நோய்மிகச் சாஅய்ச் சொல்லியது உரைமதி நீயே முல்லை நல்யாழ்ப் பாணமற்று எமக்கே.

பனிமலர் நெடுங்கண் பசலை பாயத்

பனிமலர் நெடுங்கண் பசலை பாயத் துனிமலர் துயரமொடு அரும்படர் உழப்போள் கையறு நெஞ்சிற்கு உயவுத்துணை யாகச் சிறுவரைத் தங்குவை யாயின் காண்குவை மன்ஆல் பாணஎம் தேரே.

கருவி வானம் கார்சிறந்த் ஆர்ப்ப

கருவி வானம் கார்சிறந்த் ஆர்ப்ப பருவம் செய்தன பைங்கொடி முல்லை பல்லான் கோவலர் படலைக் கூட்டும் அன்புஇல் மாலையும் உடைத்தோ வன்புறை பாண அவர்சென்ற நாடே.

நொடிநிலை கலங்க வாடிய தோளும்

நொடிநிலை கலங்க வாடிய தோளும் வடிநலன் இழந்தஎன் கண்ணும் நோக்கிப் பெரிதுபுலம் பிணனே சீறியாழ்ப் பாணன் எம்வெம் காதலொடு பிரிந்தோர் தம்மோன் போலான் பேரன் பினனே.

மையறு சுடர்நுதல் விளங்கக் கறுத்தோர்

மையறு சுடர்நுதல் விளங்கக் கறுத்தோர் செய்யரண் சிதைத்த செருமிகு தானையொடு கதம்பரி நெடுட்ந்தேர் அதர்படக் கடைஇச் சென்றவர்த் தருகுவல் என்னும் நன்றால் அம்ம பாணனது அறிவே.

பலர்புகழ் சிரப்பின்நும் குருசில் உள்ளிச்

பலர்புகழ் சிரப்பின்நும் குருசில் உள்ளிச் செலவுநீ நய்னதனை யாயின் மன்ற இன்னா அரும்படர் எம்வயின் செய்த பொய்வ லாளர் போலக் கைவல் பாணஎம் மறாவா தீமே.

கைவல் சீறியாழ் பாண நுமரே

கைவல் சீறியாழ் பாண நுமரே செய்த பருவம் வந்துநின் றதுவே எம்மின் உணரா ராயினும் தம்வயின் பொய்படு கிளவி நாணலும் எய்யார் ஆகுதல் நோகோ யானே.

எவ்வளை நெகிழ மேனி வாடப்

எவ்வளை நெகிழ மேனி வாடப் பல்லிதல் ஊண்கண் பனி அலைக் கலங்கத் துறந்தோன் மன்ற மறங்கெழு குருசில் அதுமற்று உண்ர்ந்தனை போலாய் இன்னும் வருதி என்அவர் தகவே.

இருநிலம் குளிர்ப்ப வீசி அல்கலும்

இருநிலம் குளிர்ப்ப வீசி அல்கலும் அரும்பனி அளை இய அற்சிரக் காலை உள்ளார் காதல ராயின் ஒள்ளிழை சிறப்பொடு விளங்கிய காட்சி மறக்க விடுமோநின் மாமைக் கவினே.

பைந்தினை உணங்கல் செம்பூழ் கவரும்

பைந்தினை உணங்கல் செம்பூழ் கவரும் வன்புல நாடன் தரீஇய வலன்ஏர்ப்பு அம்கண் இருவிசும்பு அதிர ஏறொடு பெயல்தொடங் கின்றே வானம் காண்குவம் வம்மோ பூங்க ணோயே.

வரிநுணல் கறங்கத் தேரை தெவிட்டக்

வரிநுணல் கறங்கத் தேரை தெவிட்டக் கார்தொடங் கின்றே காலை இனிநின் நேர்இறை பணைத்தோட்கு ஆர்விருந் தாக வருவர் இன்றுநம் காத லோரே.

புனைஇழை நெகிழச் சாஅய் நொந்துநொந்து

புனைஇழை நெகிழச் சாஅய் நொந்துநொந்து இனையல் வாழியோ இகுளை வினைவயின் சென்றோர் நீடினர் பெரிதெனத் தங்காது நம்மினும் விரையும் என்ப வெம்முரண் யானை விறல்போர் வேந்தே.

வேந்துவிடு விழுத்தொழில் எய்தி ஏந்துகோட்டு

வேந்துவிடு விழுத்தொழில் எய்தி ஏந்துகோட்டு அண்ணல் யானை அரசுவிடுத்து இனியே எண்ணிய நாள்அகம் வருதல் பெண்ணியல் காமர் சுடர்நுதல் விளங்கும் தேமொழி அரிவை தெளிந்திசின் யானே.

நீர்இருவு அன்ன நிமிர்பரி நெடுந்தேர்

நீர்இருவு அன்ன நிமிர்பரி நெடுந்தேர் கார்செய் கானம் பிற்படக் கநடைஇ மயங்கு மலர் அகலம் நீஇனிது முயங்க வருவர் வாழி தோழி செருவெம் குருசில் தணிந்தனன் பகையே.

கண்ணெனக் கருவிளை மலரப் பொன்னென

கண்ணெனக் கருவிளை மலரப் பொன்னென இவர்கொடிப் பீரம் இரும்புதல் மலரும் அற்சிரம் மறக்குநர் அல்லர்நின் நல்தோள் மருவரற்கு உலமரு வோரே.

புதன்மிசை நறுமலர் கவின்பெறத் தொடரிநின்

புதன்மிசை நறுமலர் கவின்பெறத் தொடரிநின் நலமிகு கூந்தல் தகைகொளப் புனைய வாராது அமையலோ இலரே நேரார் நாடுபடு நன்கலம் தரீஇயர் நீடினர் தோழிநம் காத லோரே.

எதில பெய்ம்மழை காரென மயங்கிய

எதில பெய்ம்மழை காரென மயங்கிய பேதையம் கொன்றைக் கோதைநிலை நோக்கி எவன்இனி மடந்தைநின் கலிழ்வே நின்வயின் தகையெழில் வாட்டுநர் அல்லர் முகையவிழ் புறவுஇன் நாடிறந் தோரே.

வான்பிசிர்க் கருவியின் பிடவுமுகை தகையக்

வான்பிசிர்க் கருவியின் பிடவுமுகை தகையக் கான்பிசிர் கற்பக் கார்தொடங் கின்றே இனையல் வாழி தோழி எனையதூஉம் நின்துறந்து அமைகுவர் அல்லர் வெற்றி வேந்தன் பாசறை யோரே.

பெரு ஞ்சின வென்ந்தனும் பாசறை முனியான்

பெரு ஞ்சின வென்ந்தனும் பாசறை முனியான் இருங்கலி வெற்பன் தூதும் தோன்றா ததை இலை வாழை முழுமுதல் அசைய இன்னா வாடையும் அலைக்கும் என்ஆகு வன்கொல் அளியென் யானே.

மெலிறைப் பணைத்தோள் பசலை தீரப்

மெலிறைப் பணைத்தோள் பசலை தீரப் புல்லவும் இயைவது கொல்லோ புல்லார் அரண்க டந்த சீர்கெழு தானை வெல்போர் வேந்தனொடு சென்றா நல்வய லூரன் நறுந்தண் மார்பே.

துணர்க்காய்க் கொன்றைக் குழற்பழம் ஊழ்த்தன்

துணர்க்காய்க் கொன்றைக் குழற்பழம் ஊழ்த்தன் அதிர்பெர்ய்ர்க்கு எதிரிய சிதர்கொள் தண்மலர் பாணர் பெருமகன் பிரிந்தென மாண்நலம் இழந்தஎன் கண்போன் றனவே.

பெய்பன் நலிய உய்தல்செல் லாது

பெய்பன் நலிய உய்தல்செல் லாது குருகினம் நரலும் பிரிவருங் காலைத் த்ஹுறந்தமை கல்லார் காதலர் மறந்தமை கல்லாது என் மடங்கெழு நெஞ்சே.

உள்ளார் கொல்லோ தோழி வெள்ளிதழ்ப்

உள்ளார் கொல்லோ தோழி வெள்ளிதழ்ப் பகல்மதி உருவைல் பகன்றை மாமலர் வெண்கொடி ஈங்கை பைம்புதல் அணியும் அரும்பனி அளை இய கூதிர் ஒருங்கிவண் உறைதல் தெளிந்தகன் றோரே.

அரசுபகை தணிய முரசுபடச் சினை இ

அரசுபகை தணிய முரசுபடச் சினை இ ஆர்குரல் எழிலி கார்தொடங் கின்றே அளியவோ அளிய தாமேஎ ஒளிபசந்து மின்னிழை ஞெகிழச் சாஅய்த் தொன்னலம் இழந்த என் தடமெல் தோளே.

தளவின் பைங்கொடி தழீஇப் பையென

தளவின் பைங்கொடி தழீஇப் பையென நிலவின் அன்ன நேரும்பு பேணிக் கார்நய்ந்து எய்தும் முல்லை அவர் தேர்நயந்து உறையும் என் மாமைக் கவினே.

அவல்தொறும் தேரை தெவிட்ட மிசைதொறும்

அவல்தொறும் தேரை தெவிட்ட மிசைதொறும் வெங்குரல் புள்ளினம் ஒலிப்ப உதுக்காண் கார்தொடங் கின்றால் காலை அதனால் நீர்தொடங் கினவால் நெடுங்கணவர் தேர்தொடங் கின்றால் நம்வயி நானே.

வற்ந்த ஞாலம் தளிர்ப்ப வீசிக்

வற்ந்த ஞாலம் தளிர்ப்ப வீசிக் கற்ங்குரல் எழிலி கார்செய் தன்றே பகைவெங் காதலர் திறைதரு முயற்சி மெல்தோள் ஆய்கவின் மறையப் பொன்புனை பீரத்து அலர்செய் தன்றே.

கார்செய் காலையொடு கையற்ப் பிரிந்தோர்

கார்செய் காலையொடு கையற்ப் பிரிந்தோர் தேர்தரு விருந்தில் தவிர்குதல் யாவது மாற்றருந் தானை நோக்கி ஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழிலே.

முரசுமாறு இரட்டும் அருந்தொழில் பகைதணிந்து

முரசுமாறு இரட்டும் அருந்தொழில் பகைதணிந்து நாடுமுன் னியரோ பீடுகெழ வேந்தன் வெய்ய உயிர்க்கு நோய்தணியச் செய்யோள் இலமுஅலைப் படீஇயர்என் கண்ணே.

முரம்புகண் உடையத் திரியும் திகிரியொடு

முரம்புகண் உடையத் திரியும் திகிரியொடு பணைநிலை முனைஇய வயமாப் புணர்ந்து திண்ணிதின் மாண்டன்று தேரே ஒள்நுதல் காண்குவம் வேந்துவினை முடினே.

தழங்குரல் முரசம் காலை இயம்பக்

தழங்குரல் முரசம் காலை இயம்பக் கடுஞ்சின வேந்தன் தொழில் எதிர்ந் தனனே. மெல்லவல் மருங்கின் முல்லை பூப்பப் பொங்குபெயல் கனைதுளி கார் எதிர்ந் தன்றே அஞ்சில் ஓதியை உள்லுதொறும் துஞ்சாது அலமரல் நாமெதிர்ந் தனமே.

பிணிவீடு பெறுக மன்னவன் தொழிலே

பிணிவீடு பெறுக மன்னவன் தொழிலே பனிவளர் தளவின் சிரல்வாய்ச் செம்முகை யாடு சிறைவண்டு அழிப்பப் பாடல் சான்ற காண்கம்வாள் நுதலே.

முல்லை நாறும் கூந்தல் கம்ழ்கொள

முல்லை நாறும் கூந்தல் கம்ழ்கொள நல்ல காண்குவ மாஅ யோயே பாசறை அருந்தொழில் உதவிநம் காதல்நன் னாட்டுப் போதரும் பொழுதே.

புகழ்சால் சிறப்பின் காதலி புலம்பத்

புகழ்சால் சிறப்பின் காதலி புலம்பத் துராந்துவந் தனையே அருந்தொழில் கட்டூர் நல்லேறு தழீஇ நாகுபெயர் காலை உள்லூதொறும் கலிழும் நெஞ்சம் வல்லே எம்மையும் வரவிழைந் தனையே.

பெருந்தோள் மடவரல் காண்குவெம் தில்ல

பெருந்தோள் மடவரல் காண்குவெம் தில்ல நீண்மதில் அரணம் பாய்ந்தெனத் தொடிபிளந்து வைந்நுதி மழுகிய தடங்கோட்டு யானை வென்வேல் வேந்தன் பகைதணிந்து இன்னும் தன்னாட்டு முன்னுதல் பெறினே.

நனிசேத்து என்னாது நல்தேர் ஏறிச்சென்று

நனிசேத்து என்னாது நல்தேர் ஏறிச்சென்று இலங்கு நிலவின் இளம்பிறை போலக் காண்குவம் தில்அவள் கவின்பெறு சுடர்நுதல் விண்ணுயர் அரண்பல வெளவிய மண்ணுறு முரசின் வேந்துதொழில் விடினே.

பெருஞ்சின வேந்தன் அருந்தொழில் தணியின்

பெருஞ்சின வேந்தன் அருந்தொழில் தணியின் விருந்து நனி பெறுதலும் உரியள் மாதோ இருண்டு தோன்றும் விசும்பினுயர் நிலையுலகத்து அருந்ததி அனைய கற்பின் குரும்பை மணிப்பூண் புதல்வன் கற்பின்

ஐய ஆயின செய்யோள் களவி

ஐய ஆயின செய்யோள் களவி கார்நாள் உருமொடு கையறப் பிரிந்தென நோய் நன்கு செய்தன் எமக்கே யாம்உறு துயரம் அவள் அறியினோ நன்றே.

நன்றே காதலர் சென்ற ஆறே

நன்றே காதலர் சென்ற ஆறே தன்பெயல் அளித்த பொழுதின் ஒண்சுடர்த் தோன்றியும் தளவமும் உடைத்தே.

நன்றே காதலர் சென்ற ஆறே

நன்றே காதலர் சென்ற ஆறே குருந்தக் கண்ணிக் கோவலர் பெருந்தண் நிலைய பாக்கமும் உடைத்தே.

நன்றே காதலர் சென்ற ஆறே

நன்றே காதலர் சென்ற ஆறே பைம்புதல் பம்பூ மலர இன்புறத் தருந பண்புமார் உடைத்தே.

நன்றே காதலர் சென்ற ஆறே

நன்றே காதலர் சென்ற ஆறே ஆலித் தண்மழை தலைஇய வாலிய மலர்ந்த முல்லையும் உடைத்தே.

நன்றே காதலர் சென்ற ஆறே

நன்றே காதலர் சென்ற ஆறே நன்பொன் அன்ன சுடரிணர்க் கொன்றையொடு மலர்ந்த குருந்துமா ருடைத்தே.

நன்றே காதலர் சென்ற ஆறே

நன்றே காதலர் சென்ற ஆறே நிலன் அணி நெய்தல் மலரப் பொலன்அணி கொன்றையும் பிடவமும் உடைத்தே.

நன்றே காதலர் சென்ற ஆறே

நன்றே காதலர் சென்ற ஆறே மறியுடை மாண்பிணை உகளத் தண்பெயல் பொழிந்த இன்பமும் உடைத்தே.

நன்றே காதலர் சென்ற ஆறே

நன்றே காதலர் சென்ற ஆறே நீர்ப்பட எழிலி வீசும் கார்ப்பெயற்கு எதிரிய கானமும் உடைத்தே.

நன்றே காதலர் சென்ற ஆறே

நன்றே காதலர் சென்ற ஆறே சுடுபொன் அன்ன கொன்றை சூடிக் கடிபுகு வனர்போல் மள்ளரும் உடைத்தே

நன்றே காதலர் சென்ற ஆறே

நன்றே காதலர் சென்ற ஆறே அணிநிற இரும்பொறை மீமிசை மணிநிற உருவின தோகையும் உடைத்தே.

நெடும்பொறை மிசைய குறுங்கால் கொன்றை

நெடும்பொறை மிசைய குறுங்கால் கொன்றை அடர்பொன் என்னச் சுடரிதழ் பகரும் கான்கெழு நாடன் மகளோ அழுதல் ஆன்றிசின் அழுங்குவல் செலவே.

பல்லிருங் கூந்தல் பசப்பு நீவிடின்

பல்லிருங் கூந்தல் பசப்பு நீவிடின் செல்வேம் தில்ல யாமே செற்றார் வெல்கொடி அரணம் முருக்கிய கல்லா யானை வெந்துபகை வெலற்கே.

தேர்செல அழுங்கத் திருவில் கோலி

தேர்செல அழுங்கத் திருவில் கோலி ஆர்கலி எழிலி சோர்தொடங் கின்றே வேந்துவிடு விழுத்தொழில் ஒழிய யாந்தொடங் கின்னால் நின்புரந் தரலே.

பேரமர் மலர்க்கண் மடந்தை நீயே

பேரமர் மலர்க்கண் மடந்தை நீயே காரெதிர் ஒழுதென விடல்ஒல் லாயே போருடை வேந்தன் பாசறை வாரான் அவனெனச் செலவழுங் கினனே.

வென்வேல் வேந்தன் அருந்தொழில் துறந்தினி

வென்வேல் வேந்தன் அருந்தொழில் துறந்தினி நன்னுதல் யானே செலஒழிந் தனனே முரசுபாடு அதிர ஏவி அரசுபடக் கடக்கும் அருஞ்சமத் தானே.

புன்புறப் பேடை சேவல் இன்புற

புன்புறப் பேடை சேவல் இன்புற மன்னர் இயவரின் இரங்கும் கானம் வல்லை நெடுந்தேர் கடவின் அல்லல் அருநோய் ஒழித்தல் எமக் கெளிதே.

புறவணி நாடன் காதல் மடமகள்

புறவணி நாடன் காதல் மடமகள் ஒண்ணுதல் பசப்ப நீசெலின் தெண்ணீர்ப் போதவிழ் தாமரை அன்னநின் காதலன் புதல்வன் அழும்இனி முலைக்கே

மாமலை இடியூஉத் தளீசொரிந் தன்றே

மாமலை இடியூஉத் தளீசொரிந் தன்றே வாள்நுதல் பசப்பச் செலவயர்ந் தனையே யாமே நிந்துறந்து அமையலம் ஆய்மலர் உண்கணும் நீர்நிறைந் தனவே.

கடும்பரி நெடுந்தேர்க் கால்வல் புரவி

கடும்பரி நெடுந்தேர்க் கால்வல் புரவி நெடுங்கொடி முல்லையொடு தளவமதிர் உதிர விரையுபு கடை இநாம் செல்லின் நிரைவளை முன்கை வருந்தலோ இலளே.

மாலை வெண்காழ் காவலர் வீச

மாலை வெண்காழ் காவலர் வீச நறும்பூம் புறவின் ஒடுங்குமுயல் இரியும் புன்புல நாடன் மடமகள் நலங்கினர் பணைத்தோள் விலங்கின செலவே.

பொன்னெனமலர்ந்த கொன்றை மணியெனத்

பொன்னெனமலர்ந்த கொன்றை மணியெனத் தேம்படு காயா மலர்ந்த தொன்றியொடு நன்னலம் எய்தினை புறவே நின்னைக் காணிய வருதும் யாமே வாள்நுதல் அரிவையொடு ஆய்நலம் படர்ந்தே.

உயிர்கலந்து ஒன்றிய செயிர்தீர் கேண்மைப்

உயிர்கலந்து ஒன்றிய செயிர்தீர் கேண்மைப் பிரிந்துறல் அறியா விருந்து கவவி நம்போல் நயவரப் புணர்ந்தன கண்டிகு மடவரல் புறவின் மாவே.

வானம் பாடி வறங்களைந்து ஆனாது

வானம் பாடி வறங்களைந்து ஆனாது அழிதுளி தலைஇய புறவின் காண்வர வானர மகளா நீயே மாண்முலை அடைய முயங்கி யோயே.

கார்கலந் தன்றால் புறவே பலவுடன்

கார்கலந் தன்றால் புறவே பலவுடன் நேர்பரந் தனவால் புனமே ஏர்கலந்து தாதார் பிரசம் மொய்ப்பப் போதார் கூந்தல் முயங்கினள் எம்மே.

போதார் நறுந்துகள் கவினிப் புறவில் தாதார்ந்து

போதார் நறுந்துகள் கவினிப் புறவில் தாதார்ந்து களிச்சுரும்பு அரற்றும் காமர் புதலின் மடப்பிடி தழீஇய மாவே சுடர்த்தொடி மடவரல் புணர்ந்தனம் யாமே.

இதுவே மடந்தைநாம் மேவிய பொழுதே

இதுவே மடந்தைநாம் மேவிய பொழுதே உதுவே மடந்தைநாம் உள்ளிய புறவே இனிதுடன் கழிக்கின் இளமை இனிதால் அம்ம இனிஅவர்ப் புணர்வே.

புள்ளும் மாவும் புணர்ந்தினது உகளக்

புள்ளும் மாவும் புணர்ந்தினது உகளக் கோட்டவும் கொடியவும் பூப்பல பழுனி மெல்லியல் அரிவை கண்டிகு மல்லல் ஆகிய மணங் கமழ் புறவே.

நின்னுதல் நாறும் நறுந்தண் புறவின்

நின்னுதல் நாறும் நறுந்தண் புறவின் நின்னே போல மஞ்ஞை யாலக் கார்தொடங் கின்றால் பொழுதே பேரியல் அரிவை நாநயத்தகவே.

காயா கொன்றை நெய்தல் முல்லை

காயா கொன்றை நெய்தல் முல்லை போதவிழ் தளவொடு பிடவலர்ந்து கவினிப் பூவணி கொண்டன்றால் புறவே பேரமர்க் கண்ணி ஆடுகம் விரைந்தே.

ஆர்குரல் எழிலி அழிதுளி சிதறிக்

ஆர்குரல் எழிலி அழிதுளி சிதறிக் கார்தொடங் கின்றால் காமர் புறவே வீழ்தரு புதுப்புனல் ஆடுகம் தாழிருங் கூந்தல் வம்மடி விரைந்தே.

மாலை முன்றில குறுங்கால் கட்டில்

மாலை முன்றில குறுங்கால் கட்டில் மனையோள் துணைவி யாகப் புதல்வன் மார்பின் ஊரும் மகிழ்நகை இன்பப் பொழுதிற்கு ஒத்தன்று மன்னே மென்பிணித் தம்ம பாணனது யாழே.

புதல்வன் கவைஇயினன் தந்தை மென்மொழிப்

புதல்வன் கவைஇயினன் தந்தை மென்மொழிப் புதல்வன் தாயோ இருவரும் கவையினள் இனிது மன்றஅவர் கிடக்கை நனியிரும் பரப்பின்இவ் உலகுடன் உறுமே.

பாணர் முல்லை பாடச் சுடரிழை

பாணர் முல்லை பாடச் சுடரிழை வணுதல் அரிவை முல்லை மலைய இனிதிருந் தனனே நெடுந்தகை துனிதீர கொள்கைத்தன் புதல்வனொடு பொலிந்தே.

நய்ந்த காதலித் தழீஇப் பாணர்

நய்ந்த காதலித் தழீஇப் பாணர் நய்ம்படு முரற்கையின் யாத்த பயன்தெரிந்து இன்புறு புணர்ச்சி நுகரும் மென்புல வைப்பின் நாடுகிழ வோனே.

மாதர் உண்கண் மகன்விளை யாடக்

மாதர் உண்கண் மகன்விளை யாடக் காதலித் தழீஇ இனிதிருந் தனனே தாதார் பிரசம் ஊதும் போதார் புறவின் நாடுகிழ வோனே.

ஒண்சுடர்ப் பாண்டில் செஞ்சுடர் போல

ஒண்சுடர்ப் பாண்டில் செஞ்சுடர் போல மனைக்குவிளக் காயினள் மன்ற கனைப்பெயல் பூப்பல அணிந்த வைப்பின் புறவணி நாடன் புதல்வன் தாயே.

வாழ்நுதல் அரிவை மகன்முலை யூட்டத்

வாழ்நுதல் அரிவை மகன்முலை யூட்டத் தானவன் சிறுபுறம் கவையினன் நன்று நறும்பூம் தண்புற அணிந்த குறும்பல் பொறைய நாடுகிழ வோனே.

புணர்ந்தகா தலியின் புதல்வன் தலையும்

புணர்ந்தகா தலியின் புதல்வன் தலையும் அமர்ந்த உள்ளம் பெரிதா இன்றே அகன்பெருஞ் சிறப்பின் தந்தை பெயரன் முறுவலில் இன்னகை பயிற்றிச் சிறுதேர் உருட்டும் தளர்நடை கண்டே.

புதல்வற் கவைஇய தாய்புற முயங்கி

புதல்வற் கவைஇய தாய்புற முயங்கி நசையினன் வதிந்த கிடக்கை பாணர் நரம்புளர் முரற்கை போல இனிதால் அம்ம பண்புமா ருடைத்தே.

மறியிடைப் படுத்த மான்பிணை போலப்

மறியிடைப் படுத்த மான்பிணை போலப் புதல்வன் நடுவண னாக நன்றும் இனிது மன்றஅவர் கிடக்கை முனிவின்றி நீல்நிற வியலகம் கவைஇய ஈனும் உம்பரும் பெறலரும் குரைத்தே.

மள்ளர் அன்ன மரவந் தழீஇ

மள்ளர் அன்ன மரவந் தழீஇ மகளிர் அன்ன ஆடுகொடி நுடக்கும் அரும்பதம் கொண்ட பெரும்பத வேனில் காதல் புணர்ந்தனள் ஆகி ஆய்கழல் வெஞ்சின விரல்வேல் காலையொடு இன்றுபுகு தருமென வந்தன்று வந்தன்று தூதே.

நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்

நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும் எம்மனை வதுவை நன்மணம் கழிகெனச் சொல்லின் எவனோ மற்றே வென்வேல் மையற விளங்கிய கழலடிப் பொய்வல் காளையை ஈன்ற தாய்க்கே.

புள்ளும் அறியாப் பல்பழம் பழுனி

புள்ளும் அறியாப் பல்பழம் பழுனி மடமான் அறியாத் தடநீர் நிலைஇச் சுரநனி இனிய வாகுக என்று நினைத்தொறும் கலிழும் என்னினும் மிகப்பெரிது புலம்பின்று தோழிநம் ஊரே.

கவிழ்மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை

கவிழ்மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை குருளைப் பன்றி கொள்ளாது கழியும் சுரன்அணி வாரா நின்றனள் என்பது முன்னுற விரந்தநீர் உரைமின் இன்நகை முறுவல்என் ஆயத்தோர்க்கே.

புலிப்பொறி வேங்கைப் பொன்னிணர் கொய்துநிண்

புலிப்பொறி வேங்கைப் பொன்னிணர் கொய்துநிண் கதுப்பயல் அணியும் அளவை பைபயச் சுரத்திடை அயர்ச்சியை ஆறுக மடந்தை கல்கெழு சிறப்பின் நம்மூர் எவ்விருந் தாகிப் புகுக நாமே.

முளிவயிர்ப் பிறந்த வளிவளர் கூர்எரிச்

முளிவயிர்ப் பிறந்த வளிவளர் கூர்எரிச் சுடர்விடு நெடுங்கொடி விடர்குகை முழங்கும் இன்னா அருஞ்சுரம் தீர்ந்தனம் மென்மெல ஏகுமதி வாழியோ குறுமகள் போதுகலந்து கறங்கிசை அருவி வீழும் பிறங்கிரும் சோலைநம் மலைகெழு நாட்டே.

மாண்பில் கொள்கையொடு மயங்குதுயர் செய்த

மாண்பில் கொள்கையொடு மயங்குதுயர் செய்த அன்பில் அறானும் அருளிற்று மன்ற வெஞ்சுரம் இறந்த அம்சில் ஓதிப் பெருமட மான்பிணை அலைத்த சிறுநுதல் குறுமகள் காட்டிய வம்மே.

துறந்ததன் கொண்டு துயரடச் சாஅய்

துறந்ததன் கொண்டு துயரடச் சாஅய் அறம்புலந்து பழிக்கும் அண்க ணாட்டி எவ்வ நெஞ்சிற்கு ஏம மாக வந்தன ளோநின் மகளே வெந்திறல் வெள்வேல் விடலைமுந் துறவே.

வேய்வனப்பு இழந்த தோளும் வெயில்தெற

வேய்வனப்பு இழந்த தோளும் வெயில்தெற வாய்கவின் தொநந்த நுதலும் நோக்கிப் பரியல் வாழி தோழி பரியின் எல்லைஇல் இடும்பை தரூஉம் நல்வரை நாடனொடு வந்த மாறே.

மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை

மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை அன்புடை மரபின்நின் கிளையோடு ஆரப் பச்சூன் பெய்த பைந்நிண வல்சி பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ வெம்சின விறல்வேல் காளையொடு அம்சில் ஓதியை வரக்கரைந் தீமே.

நல்லோர் ஆங்கண் பர்ந்துகை தொழுது

நல்லோர் ஆங்கண் பர்ந்துகை தொழுது பல்லூழ் மறுகி வனவு வோயே திண்தோள் வல்வில் காளையொடு கண்டனெம் மன்ற சுரத்திடை யாமே.

செய்வினை பொலிந்த செறிகழல் நோந்தாள்

செய்வினை பொலிந்த செறிகழல் நோந்தாள் மையணல் காளையொடு பைய இயலிப் பாவை யன்னஎன் ஆய்தொடி மடந்தை சென்றனள் என்றிர் ஐய ஒன்றின வோஅவள் அம்சிலம் படியே.

நெரும்பவிர் கனலி உர்ப்புசினந் தணியக்

நெரும்பவிர் கனலி உர்ப்புசினந் தணியக் கருங்கால் யாத்து வரிநிழல் இரீஇச் சிறுவரை இறப்பின் காண்குவை செறிதொடிப் பொன்னேர் மேணி மடந்தையொடு வென்வேல் விடலை முன்னிய சுரனே.

அறம்புரி அருமறை நவின்ற நாவில்

அறம்புரி அருமறை நவின்ற நாவில் திறம்புரி கொள்கை அந்தணீர் தொழுவலென்று ஒள்தொடி வினவும் பேதையம் பெண்டே கண்டனெம் அம்ம சுரத்திடை அவளை இந்துணை இனிதுபா ராட்டக் குன்றுயர் பிறங்கல் மலையிறந்த் தோளே.

புன்கண் யானையொடு புலிவழங்கு அத்தம்

புன்கண் யானையொடு புலிவழங்கு அத்தம் நய்ந்த காதலற் புணர்ந்துசென் றனளே நெடுஞ்சுவர் நல்லில் மருண்ட இடும்பை உறவிநின் கடுஞ்சூல் மகளே.

கடுங்கண் காளையொட்ய் நெடுந்தேர் ஏறிக்

கடுங்கண் காளையொட்ய் நெடுந்தேர் ஏறிக் கோள்வல் வேங்கை மலையிறக்கொழிய வேறுபல் அருஞ்சுரம் இறந்தனள் அவளெனக் கூறுமின் வாழியோ ஆறுசெல் மாக்கள் நல்தோள் நயந்துபா ராட்டி என்கெடுத்து இருந்த அறனில் யாய்க்கே.

சேண்புலம் முன்னிய அசைநடை அந்தணிர்

சேண்புலம் முன்னிய அசைநடை அந்தணிர் நும்மொன்று இரந்தனென் மொழிவல் எம்மூர் ஆய்நயந்து எடுத்த ஆய்நலம் கலின ஆரிடை இறந்தனள் என்மின் நேர் இறை முன்கைஎன் ஆயத் தோர்க்கே.

கோள்சுரும்பு அரற்றும் நாள்சுரத்து அமன்ற

கோள்சுரும்பு அரற்றும் நாள்சுரத்து அமன்ற நெடுங்காண் மராஅத்துக் குறுஞ்சினை பற்றி வல்ஞ்சுரி வாலிணர் கொய்தற்கு நின்ற மள்ளன் உள்ள மகிழ்கூர்ந்துஅன்றே பஞ்சாய்ப் பாவைக்கும் தனக்கும் அம்சாய் கூந்தல் ஆய்வது கண்டே.

புன்னொலிக்கு அமர்த்த கண்ணன் வெள்வேல்

புன்னொலிக்கு அமர்த்த கண்ணன் வெள்வேல் திருந்துகழ் காளையொடு அருஞ்சுரம் கழிவோள் எல்லிடை அசைந்த கல்லென் சீறூர்ப் புனையிழை மகளிர்ப் பயந்த மனைகெழு பெண்டிர்க்கு நோவுமார் பெரிதே.

பைங்காய் நெல்லி பலவுடன் மிசைந்து

பைங்காய் நெல்லி பலவுடன் மிசைந்து செங்கால் மராஅத்த வரிநிழல் இருந்தோர் யார்கொல் அளியர் தாமே வார்சிறைக் குறுங்கால் மகன்றில் அன்ன உடன்புணர் கொள்கைக் காத லோரே.

அத்தம் நீளிடை அவனொடு போகிய

அத்தம் நீளிடை அவனொடு போகிய முத்தேர் வெண்பல் முகிழ்நகை மடவரல் தாயர் என்னும் பெயரே வல்லாறு எடுத்தேன் மன்ற யானே கொடுத்தோர் மன்றஅவள் ஆயத் தோரே.

தன்னமர் ஆயமொடு நன்மண நுகர்ச்சியின்

தன்னமர் ஆயமொடு நன்மண நுகர்ச்சியின் இனிதாங் கொல்லோ தனக்கே பனிவரை இனக்களிறு வழங்கும் சோலை வயக்குறு வெள்வேல் அவற்புணர்ந்து செலவே.

செல்லிய முயலிப் பாஅய சிறகர்

செல்லிய முயலிப் பாஅய சிறகர் வாவல் உகக்கும் மாலையாம் புலம்பப் போகிய அவட்கோ நோவேன் தேமொழித் துணையிலள் கலிழும் நெஞ்சின் இணையேர் உண்கண் இவட்குநோ வதுமே.

நீர்நசைக்கு ஊக்கிய உயவல் யானை

நீர்நசைக்கு ஊக்கிய உயவல் யானை இயம்புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம் சென்றனள் மன்றஎன் மகளே பந்தும் பாவையும் கழங்கும்எமக்கு ஒழித்தே.

நாள்தொறும் கலிழும் என்னினும் இடைநின்று

நாள்தொறும் கலிழும் என்னினும் இடைநின்று காடுபடு தீயின் கனலியர் மாதோ நல்வினை நெடுநகர் கல்லெனக் கலங்கப் பூப்புரை உண்கண் மடவரல் போக்கிய புணர்த்த அறனில் பாலே.

இதுவென் பாவை பாவை இதுஎன்

இதுவென் பாவை பாவை இதுஎன் அலமரு நோக்கின் நலம்வரு சுடர்நுதல் பைங்கிளி எடுத்த பைங்கிளி என்றிவை காண்தொறும் காண்தொறும் கலங்க நீங்கின ளோஎன் பூங்க ணோளே.

பல்லூல் நினைப்பினும் நல்லென் றூழ

பல்லூல் நினைப்பினும் நல்லென் றூழ மிளி முன்பின் காளை காப்ப முடியகம் புகாக் கூந்தலள் கடுவனும் அறியாக் காடுஇறந் தோளே.

நினைத்தொறும் கலிலும் இடும்பை எய்துக

நினைத்தொறும் கலிலும் இடும்பை எய்துக புலிக்கோட் பிழைட்த கவைக்கோட்டு முதுகலை மான்பிணை அணைதர ஆண்குரல் விளிக்கும் வெஞ்சுரம் என்மகள் உய்த்த வம்பமை வல்வில்விடலை தாயே.

என்னும் உள்ளினள் கொல்லோ தன்னை

என்னும் உள்ளினள் கொல்லோ தன்னை நெஞ்சுணத் தேற்றிய வஞ்சினக் காளையொடு அழுங்கல் மூதூர் அலரெழச் செழும்பல் குன்றம் இறந்தஎன் மகளே.

மள்ளர் கோட்டின் மஞ்ஞை யாலும்

மள்ளர் கோட்டின் மஞ்ஞை யாலும் உயர்நெடும் குன்றம் படுமழை தலைஇச் சுரநனி இனிய வாகுக தில்ல அறநெறி இதுவெனத் தெளிந்தஎன் பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே.

வண்சினைக் கோங்கின் தண்கமழ் படலை

வண்சினைக் கோங்கின் தண்கமழ் படலை இருஞ்சிறை வண்டின் பெருங்கிளை மொய்ப்ப நீநயந்து உறையப் பட்டோ ள் யாவ ளோஎம் மறையா தீமே.

வளமலர் ததிந்த வண்டுபடு நறும்பொழில்

வளமலர் ததிந்த வண்டுபடு நறும்பொழில் முளைநிரை முறுவல் ஒருத்தியொடு நெருநல் குறிநீ செய்தனை என்ப அலரே குரவ நீள்சினை உறையும் பருவ மாக்குயில் கௌவையில் பெரிதே.

எரிப்பூ இலவத்து ஊழ்கழி பன்பலர்

எரிப்பூ இலவத்து ஊழ்கழி பன்பலர் பொரிப்பூம் புன்கின் புகர்நிழல் வரிக்கும் தண்பத வேனில் இன்ப நுகர்ச்சி எம்மொடு கொண்மோ பெருமநின் எம்மெல் ஓதி அழிவிலள் எனினே.

பொரியரைக் கோங்கின் பொன்மருள் பசுவீ

பொரியரைக் கோங்கின் பொன்மருள் பசுவீ விரியிணர் வேங்கையொடு வேறுபட மிலைச்சி விரிவுமலர் அணிந்த வேனில் கான்யாற்றுத் தேரொடு குறுக வந்தோன் பேரொடு புணர்ந்தன்று அன்னைஇவள் உயிரே.

அன்னாய் வாழிவேண் டன்னை தோழி

அன்னாய் வாழிவேண் டன்னை தோழி பசந்தனள் பெரிதெனச் சிவந்த கண்ணை கொன்னே கடவுதி யாயின் என்னதூஉம் அறிய ஆகுமோ மற்றே முறியிணர்க் கோங்க பயந்த மாறே.

கணமா தொலைச்சித் தன்னையர் தந்த

கணமா தொலைச்சித் தன்னையர் தந்த நிணவூன் வல்சிப் படுபுள் ஒப்பும் நலமாண் எயிற்றி போலப் பலமிகு நல்நலம் நயவர உடையை என்நோற் றனையோ மாஇன் தளிரே.

முளமா வல்சி எயினர் தங்கை

முளமா வல்சி எயினர் தங்கை இளமா எயிற்றிக்கும் இந்நிலை அறியச் சொல்லினேன் இரக்கும் அளவை வெள்வேல் விடலை விரையா தீமே.

சிலைவிற் பகழிச் செந்துவ ராடைக்

சிலைவிற் பகழிச் செந்துவ ராடைக் கொலைவல் எயினர் தங்கைநின் முலைய சுணங்கென நினைதி நீயே அணங்கென நினையும்என் அணங்குறு நெஞ்சே.

பதுக்கைத் தாய ஒதுக்கருங் கவலைச்

பதுக்கைத் தாய ஒதுக்கருங் கவலைச் சிறுகண் யானை உறுபகை நினையாது யாக்குவந் தனையோ பூந்தார் மார்ப அருள்புரி நெஞ்சம் உய்த்தர இருள்பொர நின்ற இரவி னானே.

உயர்கரைக் கான்யாற்று அவிர்மணல் அகந்துறை

உயர்கரைக் கான்யாற்று அவிர்மணல் அகந்துறை வேனிற் பாதிரி விரிமலர் குவைஇத் தொடலை தை இய மடவரல் மகளே கண்ணினும் கதவநின் முலையே முலையினும் கதவநின் தடமென் தோளே.

எரிகவர்ந் துண்ட என்றூழ் நீளிடை

எரிகவர்ந் துண்ட என்றூழ் நீளிடை அரிய வாயினும் எளிய அன்றே அவவூறு நெஞ்சம் கலவுநனி விரும்பிக் கடுமான் திண்தேர் கடைஇ நெடுமான் நோக்கிநின் உள்ளி வரவே.

அரும்பொருள் வேட்கைய மாகிநின் துறந்து

அரும்பொருள் வேட்கைய மாகிநின் துறந்து பெருங்கல் அதரிடைப் பிரிந்த காலைத் தவநனி நெடிய வாயின இனியே அணியிழை உள்ளியாம் வருதலின் அணிய வாயின சுரத்தைடை யாறே.

கோடுயர் பன்மலை இறந்தனர் ஆயினும்

கோடுயர் பன்மலை இறந்தனர் ஆயினும் நீடவிடுமோ மற்றே நீடுநினைந்து துடைத்தொறும் துடைத்தொறும் கலங்கி உடிஅத்தெழு வெள்ள மாகிய கண்ணே.

குரவம் மலர மரவம் பூப்பச்

குரவம் மலர மரவம் பூப்பச் சுரன்அணி கொண்ட கானம் காணூஉ அழுங்குக செய்பொருள் செலவுஎன விரும்பிநின் அம்கலிழ் மாமை கவின வந்தனர் தோழிநம் காத லோரே.

உள்ளுதற்கு இனிய மன்ற செல்வர்

உள்ளுதற்கு இனிய மன்ற செல்வர் யானை பிணித்த பொன்புனை கயிற்றின் ஒள்ளெரி மேய்ந்த சுரத்திடை உள்ளம் வாங்கத் தந்தநின் குணனே.

திருந்திழை அரிவை நின்னலம் உள்ளி

திருந்திழை அரிவை நின்னலம் உள்ளி அருஞ்செயல் பொருட்பிணி பெருந்திரு உறுகெனச் சொல்லாது பெயர்தந் தேனே பல்பொறிச் சிறுகண் யானை திரிதரும் நெறிவிலங்கு அதர கானத் தானே.

ஈர்ம் பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றாஇ

ஈர்ம் பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றாஇ மறியுடை மான்பிணை கொள்ளாது கழியும் அரிய சுரன்வந் தனரே தெரியிழை அரிவைநின் பண்புதர விரைந்தே.

எரிக்கொடி கநலை இய செவ்வரை போலச்

எரிக்கொடி கநலை இய செவ்வரை போலச் சுடர்ப்பூண் விளங்கும் எந்தெழில் அகலம் நீ இனிது முயங்க வந்தனர் மாயிருஞ் சோலை மலையிறந் தோரே.

விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர்

விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர் எழுத்துடை நடுகிஅல் அன்ன விழுப்பிணர்ப் பெருங்கை யானை இருஞ்சினம் உறைக்கும் வெஞ்சுரம் அரிய என்னார் வந்தனர் தோழிநம் காத லோரே.

அத்த பலவின் வெயில்தின் சிறுகாய்

அத்த பலவின் வெயில்தின் சிறுகாய் அருஞ்சுரம் செல்வோர் அருந்தினர் கழியும் காடுபின் ஒழிய வந்தனர் தீர்கினிப் பல்லிதல் உண்கண் மடந்தைநின் நல்லெழில் அல்குல் வாடிய நிலையே.

அவரோ வாரார் தான்வந் தன்றே

அவரோ வாரார் தான்வந் தன்றே வேம்பின் ஒண்பூ உறப்பத் தேம்படு கிளவியவர்த் தெளீக்கும் போதே.

அவரோ வாரார் தான்வந் தன்றே

அவரோ வாரார் தான்வந் தன்றே பொரிகால் மாஞ்சினை புதைய எரிகால் இளந்தளிர் ஈனும் பொழுதே.

அவரோ வாரார் தான்வந் தன்றே

அவரோ வாரார் தான்வந் தன்றே வலஞ்சுரி மராஅம் வேய்ந்துநம் மண்ங்கமழ் தண்பொழில் மலரும் பொழுதே.

அவரோ வாரார் தான்வந் தன்றே

அவரோ வாரார் தான்வந் தன்றே எழில்தகை இளமுலை பொலியப் பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே.

அவரோ வாரார் தான்வந் தன்றே

அவரோ வாரார் தான்வந் தன்றே அஞ்சினைப் பாதிரி அலர்ந்தெனச் செங்கண இருங்குயில் அறையும் பொழுதே.

அவரோ வாரார் தான்வந் தன்றே

அவரோ வாரார் தான்வந் தன்றே வலஞ்சுரி மராஅம் வேய்ந்துநம் மணங்கமழ் தண்பொழில் மலரும் பொழுதே.

அவரோ வாரார் தான்வந் தன்றே

அவரோ வாரார் தான்வந் தன்றே எழில்தகை இஅள்முலை பொலியப் பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே.

அவரோ வாரார் தான்வந் தன்றே

அவரோ வாரார் தான்வந் தன்றே திணிநிலைக் கோங்கம் பயந்த அணிமிகு கொழுமுகை உடையும் பொழுதே.

அவரோ வாரார் தான்வந் தன்றே

அவரோ வாரார் தான்வந் தன்றே சுரும்புகளித்து ஆலும் இருஞ்சினைக் கருங்கால் நுணவம் கமழும் பொழுதே.

அவரோ வாரார் தான்வந் தன்றே

அவரோ வாரார் தான்வந் தன்றே குயிற்பெடை இன்குரல் அகவ அயிர்க்கேழ் நுண்ணறல் நுடங்கும் பொழுதே.

அம்ம வாழி தொழி காதலர்

அம்ம வாழி தொழி காதலர் உள்ளார் கொல்நாம் மருள்உற் றனம்கொல் விட்டுச் சென்றனர் நம்மே தட்டைத் சென்றனர் நம்மே தட்டைத் தீயின் ஊரலர் எழவே.

அம்ம வாழி தொழி சிறியிலைக்

அம்ம வாழி தொழி சிறியிலைக் குறுஞ்சினை வேம்பின் நறும்பழம் உணீஇய வாவல் உகக்கும் மாலையும் இன்றுகொல் காதலவர் சென்ற நாடே.

அம்ம வாழி தோழி சாரல்

அம்ம வாழி தோழி சாரல் இலையில வலர்ந்த ஓங்குநிலை இலவம் மலையுறு தீயில் சுரமுதல் தோன்றும் பிரிவருங் காலையும் பிரிதல் அரிதுவல் லுநர்நம் காத லோரே.

அம்ம வாழி தோழி நம் வயின்

அம்ம வாழி தோழி நம் வயின் மெய்யுற விரும்பிய கைகவர் முயக்கினும் இனிய மன்ற தாமே பனியிரும் குன்றம் சென்றோர்க்குப் பொருளே.

அம்ம வாழி தோழி நம்வயின்

அம்ம வாழி தோழி நம்வயின் பிரியலர் போலப் புணர்ந்தோர் மன்ற நின்றதில் பொருட்பிணி முற்றிய என்றூழ் நீடிய சுரன்இறந் தோரே.

அம்ம வாழி தோழி நம்வயின்

அம்ம வாழி தோழி நம்வயின் நெய்தோ ரன்ன வெவிய எருவை கற்புடை மருங்கில் கடுமுடை யார்க்கும் கடுநனி கடிய என்ப நீடி இவன் வருநர் சென்ற ஆறே.

அம்ம வாழி தோழி சிறியிலை

அம்ம வாழி தோழி சிறியிலை நெல்லி நீடிய கல்வாய் கடத்திடைப் பேதை நெஞ்சம் பின்செலச் சென்றோர் கல்லினும் வலியர் மன்ற ப்ல்லிதல் உண்கண் அழப்பிர்ந் தோரே.

அம்ம வாழி தோழி யாவதும்

அம்ம வாழி தோழி யாவதும் வல்லா கொல்லோ தாமே அவண கல்லுடை நன்னாட்டுப் புள்ளீனப் பெர்ந்தோடு யாஅம் துணைபுணர்ந்து உறைதும் யாங்குப் பிந்துறைதி என்னா தவ்வே.

அம்ம வாழி தோழி என்னதூஉம்

அம்ம வாழி தோழி என்னதூஉம் அறநில மன்ற தாமே விறன்மிசைக் குன்றுகெழு கானத்ஹ்ட பண்பின் மாக்கணம் கொடிதே காதலிப் பிரிதல் செல்லல் ஐய என்னா தவ்வே.

அம்ம வாழி தோழி அவிழிணர்க்

அம்ம வாழி தோழி அவிழிணர்க் கருங்கால் மராஅத்து வைகிசினை வான்பூ அருஞ்சுரம் செல்லுநர் ஒழிந்தோர் உள்ள இனிய கம்ழும் வெற்பின் இன்னா என்பஅவர் சென்ற ஆறே.

வெந்துக ளாகிய வெயிர்கடம் நீந்தி

வெந்துக ளாகிய வெயிர்கடம் நீந்தி வந்தனம் ஆயினும் ஒழிகஇனிச் செலவே அழுத கண்ணள் ஆய்நலம் சிதையக் கதிர்தெறு வஞ்சுரம் நினைக்கும் அவிர்கொல் ஆய்தொடி உள்ளத்துப் படரே.

ஆள்வழக்கு அற்ற பாழ்படு நனந்தலை

ஆள்வழக்கு அற்ற பாழ்படு நனந்தலை வெம்முனை அருஞ்சுரம் நீந்தி நம்மொடு மறுதரு வதுகொல் தானே செறிதொடி கழிந்துகு நிலைய வாக ஒழிந்தோள் கொண்டஎன் உரங்கெழு நெஞ்சே.

நுண்மழை தனித்தென நறுமலர் தாஅய்த்

நுண்மழை தனித்தென நறுமலர் தாஅய்த் தண்ணிய வாயினும் வெய்ய மன்ற மடவரல் இந்துணை ஒழியக் கடமுதிர் சோலைய காடிறத் தேற்கே.

பொறிவரித் தடக்கை வேதல் அஞ்சிச்

பொறிவரித் தடக்கை வேதல் அஞ்சிச் சிறுகண் யானை நிலந்தொடல் செல்வா வெயின்முளி சோலைய வேய்உயர் சுரனே அன்ன ஆர்இடை யானும் தண்மை செய்தஇத் தகையோன் பண்பே.

அழலவிர் நன்ந்தலை நிழலிடம் பெறாது

அழலவிர் நன்ந்தலை நிழலிடம் பெறாது மடமான் அமபினை மறியொடு திரங்க நீர்மருங்கு அறுத்த நிரம்பா இயவின் இன்னா மன்ற சுரமே இனிய மறையான் ஒழிந்தோள் பண்பே.

வேணில் அரையத்து இலையொலி வெரீஇப்

வேணில் அரையத்து இலையொலி வெரீஇப் போகில் புகாவுண்ணாது பிறிதுபுலம் படரும் வெம்பலை அருஞ்சுரம் நலியாது எம்வெம் காதலி பண்புதுணைப் பெற்றே.

எரிகவர்ந் துண்ட என்றூழ் நீளிடைச்

எரிகவர்ந் துண்ட என்றூழ் நீளிடைச் சிறிதுகண் படுப்பினும் காண்குவென் மன்ற நள்ளென் கங்குல் நளிமனை நெடுநகர் வேங்கை வென்ற சுணங்கின் தம்பாய் கூந்தல் மாஅ யோளே.

வள்ளெயிற்றுச் செந்நாய் வயவுறு பிணவிற்குக்

வள்ளெயிற்றுச் செந்நாய் வயவுறு பிணவிற்குக் கள்ளியங் கடத்தினைக் கேழல் பார்க்கும் வெஞ்சுரக் கவலை நீந்தி வந்த நெஞ்சம் நீ நயந்தோள் பண்பே.

நெடுங்கழை முனிய வேனில் நீடிக்

நெடுங்கழை முனிய வேனில் நீடிக் கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின் வெய்ய வாயினை முன்னே இனியே ஒண்ணுதல் அரிவையை யுள்ளுதொறும் தண்ணிய வாயின சுரட்திடை யாறே.

உலறுதலைப் பருந்தின் உளிவாய்ப் பேடை

உலறுதலைப் பருந்தின் உளிவாய்ப் பேடை அலறுதலை ஓமை அம்கவட் டேறிப் புலம்புகொள விளிக்கும் நிலம்காய் கானத்து மொழிபெயர் பன்மலை இறப்பினும் ஒழிதல் செல்லாது ஒண்டொடி குணனே.

முள்ளரை இலவத்து ஒள்ளினர் வான்பூ

முள்ளரை இலவத்து ஒள்ளினர் வான்பூ முழங்கல் அசைவளி எடுப்ப வானத்து உருமுப்படு கனலின் இருநிலத்து உறைக்கும் கவலை அருஞ்சுரம் போயினர் தவலில் அருநோய் தலைதந் தோரே.

கண்பொர விளங்கிய கதிர்தெறு வைப்பின்

கண்பொர விளங்கிய கதிர்தெறு வைப்பின் மண்புரை பெருகிய மரம்முளி கானம் இறந்தன ரோநம் காதலர் மறந்தன ரோதில் மறவா நம்மே.

ஆய்நலம் பசப்ப அரும்படர் நலிய

ஆய்நலம் பசப்ப அரும்படர் நலிய வேய்மருள் பணைத்தோள் வில்லிலை நெகிழ நசைநனி கொன்றோர் மன்ற இசைநிமிர்ந்து ஓடெரி நடந்த வைப்பின் கோடுயர் பிறங்கல் மலை இறந் தோரே.

சூழ்கம் வம்மோ தோழி பாழ்பட்டுப்

சூழ்கம் வம்மோ தோழி பாழ்பட்டுப் பைதற வெந்த பாலை வெங்காட்டு அருஞ்சுரம் இறந்தோர் தேஎத்துச் சென்ர நெஞ்சம் நீடிய பொருளே.

பொன்செய் பாண்டில் பொலங்கலம் நந்தத்

பொன்செய் பாண்டில் பொலங்கலம் நந்தத் தேரகல் அல்குல் அவ்வரி வாட இறந்தோர் மன்ற தாமே பிறங்குலைப் புல்லரை ஓமை நீடிய புலிவழங்கு அதர கானத் தானே.

பாயல் கொண்ட பனிமலர் நெடுங்கண்

பாயல் கொண்ட பனிமலர் நெடுங்கண் பூசல் கேளார் சேயர் என்ப விழைநெகிழ் செல்லல் உறீஇக் கழைமுதிர் சோலைக் காடுஇறந் தோரே.

அவிர்தொடி கொட்பக் கழுதுபுகவு அயரக்

அவிர்தொடி கொட்பக் கழுதுபுகவு அயரக் கர்ங்கண் காக்கையொடு கழுகுவிசும்பு அகலச் சிறுகண் யானை ஆள்வீழ்துத் திரித்ரும் நீளிடை அருஞ்சுரம் என்பநம் தோளிடை முனிநர் சென்ற ஆறே.

தெறுவது அம்ம நும்மகள் விருப்பே

தெறுவது அம்ம நும்மகள் விருப்பே உறுதுயர் அவலமொடு உயிர்செலச் சாஅய்ப் பாழ்படு நெஞ்சம் படர் அடக் கலங்க நாடுஇடை விலங்கிய வைப்பின் காடுஇறந் தனள்நம் காத லோனே

அறஞ்சா லியரோ அறஞ்சா லியரே

அறஞ்சா லியரோ அறஞ்சா லியரே வறனுண் டாயினும் அறஞ்சா லியரோ வாள்வனப் புற்ற அருவிக் கோள்வல் என்னையை மறிந்த குன்றே.

வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும்

வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும் ஆரிடைச் செல்வோர் ஆறுநனி வெரூஉம் காடுஇறந் தனரே காதலர் நீடுவர் கொல்என நினையும்என் நெஞ்சே.

பொலம்பசும் பாண்டில் காசுநிரை அல்குல்

பொலம்பசும் பாண்டில் காசுநிரை அல்குல் இலங்குவளை மெல்தோள் இழைநிலை நெகிழப் பிரிதல் வல்லுவை ஆயின் அரிதே விடலை இவள் ஆய்நுதற் கவினே.

வேனில் திங்கள் வெஞ்சுரம் இறந்து

வேனில் திங்கள் வெஞ்சுரம் இறந்து செலவுஅயர்ந் தனையால் நீயே நன்று நின்னயந்து உறைவி கடுஞ்சூல் சிறுவன் முறுவல் காண்டலின் இனிதோ இறுவரை நாடநீ இறந்துசெய் பொருளே.

பல்லிருங் கூந்தல் மெல்லிய லோள்வயின்

பல்லிருங் கூந்தல் மெல்லிய லோள்வயின் பிரியாய் ஆயினும் நன்றே விரியிணர்க் கால் எறுழ் ஒள்வி தாஅய முருகமர் மாமலை பிரிந்தெனப் பிரிமே.

ஞெலிகை முழங்கழல் வயமா வெரூஉம்

ஞெலிகை முழங்கழல் வயமா வெரூஉம் குன்றுடை அருஞ்சுரம் செலவயர்ந் தனையே நன்றில் கொண்கநின் பொருளே பாவை யன்னநின் துணைபிரிந்து வருமே.

வெல்போர்க் குருசில்நீ வியன்சுரம் இறப்பின்

வெல்போர்க் குருசில்நீ வியன்சுரம் இறப்பின் பல்கழ் அல்குல் அவ்வரி வாடக் குழலினும் இனைகுவள் பெரிதே விழவொலி கூந்தல் மாஅ யோளே.

களிறு பிடிதழீஇப் பிறபுலம் படராது

களிறு பிடிதழீஇப் பிறபுலம் படராது பசிதின வருத்தம் பைதறு குன்றத்துச் சுடர்தொடிக் குறுமகள் இனைய எனப்பயஞ் செய்யுமோ விடலைநின் செலவே.

கல்லாக் கோவலர் கோலின் தோண்டிய

கல்லாக் கோவலர் கோலின் தோண்டிய ஆன்நீர்ப் பத்தல் யானை வெளவும் கல்லதர்க் கவலை செல்லின் மெல்லியல் புயல்நெடுங் கூந்தல் புலம்பும் வயமான் தோன்றல் வல்லா தீமே.

புதுக்கலத் தன்ன கனிய ஆலம்

புதுக்கலத் தன்ன கனிய ஆலம் போகில்தனைத் தடுக்கும் வேனில் அருஞ்சுரம் தண்ணிய இனிய வாக எம்மொடுஞ் சென்மோ விடலை நீயே.

அரும்பெருள் செய்வினை தப்பற்கும் உரித்தே

அரும்பெருள் செய்வினை தப்பற்கும் உரித்தே பெருந்தோள் அரிவை தகைத்தற்கும் உரியள் செல்லாய் அயினோ நன்றே மல்லம் புலம்ப இவள்அழப் பிரிந்தே.

மால்வெள் ளோத்திரத்து மையில் வாலிணர்

மால்வெள் ளோத்திரத்து மையில் வாலிணர் அருஞ்சுரம் செல்வோர் சென்னிக் கூட்டும் அவ்வரை யிறக்குவை யாயின் மைவரை நாட வருந்துவள் பெரிதே.

கொடிச்சி கூந்தல் போலத் தோகை

கொடிச்சி கூந்தல் போலத் தோகை அம்சிறை விவரிக்கும் பெருங்கல் வெற்பன் வந்தனன் எதிர்ந்தனர் கொடையே அம்தீம் கிளவி பொலிகநின் சிறப்பே.

குனற நாடன் குன்றத்துக் கவாஅன்

குனற நாடன் குன்றத்துக் கவாஅன் பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும் அம்சில் ஓதி அசைநடைக் கொடிச்சி கண்போல் மலர்தலும் அரிதுஇவள் தன்போல் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே.

மழைவரவு அறியா மஞ்ஞை ஆலும்

மழைவரவு அறியா மஞ்ஞை ஆலும் அடுக்கல் நல்லூர் அசைநடைக் கொடிச்சி தான்எம் அருளாள் ஆயினும் யாம்தன் உள்ளுபு மற்ந்தறி யேமே.

விரிந்த வேங்கைப் பெருஞ்சினைத் தோகை

விரிந்த வேங்கைப் பெருஞ்சினைத் தோகை பூக்கொய் மகளிரின் தோன்றும் நாட பிரியினும் பிரிவ தன்றே நின்னொடு மேய மடந்தை நட்பே.

கொடிச்சி காக்கும் பெருங்குரல் ஏனல்

கொடிச்சி காக்கும் பெருங்குரல் ஏனல் அடுக்கல் மஞ்ஞை கவரு நாட நடுநாள் கங்குலும் வருதி கடுமா தாக்கின் அறியேன் யானே.

வருவது கொல்லோ தனே வாராது

வருவது கொல்லோ தனே வாராது அவணுறை மேவலின் அமைவது கொல்லோ புனவர் கொள்ளியின் புகல்வரும் மஞ்ஞை இருவி யிருந்த குருவி வருந்துறப் பந்தாடு மகளிரின் படர்தரும் குன்றுகெழு நாடனொடு சென்றஎன் நெஞ்சே.

எரிமருள் வேங்கை இருந்த தோகை

எரிமருள் வேங்கை இருந்த தோகை இழையணி மடந்தையின் தோன்றும் நாட இனிதுசெய் தனையால் நுந்தை வாழியர் நன்மனை வதுவை அயர இவள் பின்னருங் கூந்தல் மலர் அணிந் தோரே.

சிலம்புகமழ் காந்தன் நறுங்குலை யன்ன

சிலம்புகமழ் காந்தன் நறுங்குலை யன்ன நலம்பெறு கையின்என் கண்புதைத் தோயே பாயல் இந்துணை யாகிய பணைத்தோள் தோகை மாட்சிய மடந்தை நீயலது உளரோஎன் நெஞ்சமர்ந் தோரே.

மயில்கள் ஆலப் பெருந்தேன் இமிரத்

மயில்கள் ஆலப் பெருந்தேன் இமிரத் தண்மழை தழீஇய மாமலை நாட நின்னினும் சிறந்தனள் எமக்கே நீநயந்து நன்மனை அருங்கடி அயர எம்நலம் சிறப்பயாம் இனிப்பெற் றோளே.

மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும்

மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும் துறுகல் அடுக்கத்து அதுவே பணைத்தோள் ஆய்தழை நுடங்கும் அல்குல் காதலி உறையும் நனிநல் லூரே.

அறம்புரி செங்கோல் மன்னனின் தாம்நனி

அறம்புரி செங்கோல் மன்னனின் தாம்நனி சிறந்தன போலும் கிள்ளை பிறங்கிய பூக்கமழ் கூந்தல் கொடிச்சி நோக்கவும் படும்அவள் ஒப்பவும் படுமே.

கொடிச்சி இன்குரல் கிளிசெத் தடுக்கத்துப்

கொடிச்சி இன்குரல் கிளிசெத் தடுக்கத்துப் பைங்குரல் ஏனல் படர்தரும் கிளியெனக் காவலும் கடியுநர் போல்வர் மால்வரை நாட வரைந்தனை கொண்மோ.

நன்றே செய்த உதவி நன்றுதெரிந்து

நன்றே செய்த உதவி நன்றுதெரிந்து யாம் எவன் செய்குவம் நெஞ்சே மெல்லியல் கொடிச்சி காப்பப் பல்குரல் ஏனல் பாத்தரும் கிளியே.

நெடுவரை மிசையது குறுங்கால் வருடை

நெடுவரை மிசையது குறுங்கால் வருடை தினைபாய் கிள்ளை வெரூஉம் நாட வல்லை மன்ற பொய்த்தல் வல்லாய் மன்றநீ அல்லது செயலே.

சிறுதினை கொய்த இருவை வெண்கால்

சிறுதினை கொய்த இருவை வெண்கால் காய்த்த அவரைப் படுகிளி கடியும் யாண ராகிய நன்மலை நாடன் புகரின்று நயந்தனன் போலும் கவரும் தோழிஎன் மாமைக் கவினே.

பின்னிருங் கூந்தல் நன்னுதல் குறமகள்

பின்னிருங் கூந்தல் நன்னுதல் குறமகள் மெல்தினை நுவனை யுண்டு தட்டையின் ஐவனச் சிறுகிளி கடியும் நாட வீங்குவளை நெகிழப் பிரிதல் யாங்குவல் லுநையோ ஈங்கிவள் துறந்தே.

அரிய தாமே செவ்வாய்ப் பைங்கிளி

அரிய தாமே செவ்வாய்ப் பைங்கிளி குன்றக் குறவர் கொய்தினைப் பைங்கால் இருவை நீள்புனங் கண்டும் பிரிதல் தேற்றாப் பேரன் பினவே.

வன்கண் கானவன் மென்சொல் மடமகள்

வன்கண் கானவன் மென்சொல் மடமகள் புன்புல மயக்கத்து உழுத ஏஅனல் பைம்புறச் சிறுகிளி கடியும் நாட பெரிய கூறி நீப்பினும் பொய்வலைப் படூஉம் பெண்டுதவப் பலவே.

சாரல் புறத்த பெருங்குரல் சிறுதினைப்

சாரல் புறத்த பெருங்குரல் சிறுதினைப் பேரமர் மழைக்கண் கொடிச்சி கடியவும் சோலைச் சிறுகிளி உன்னு நாட அரிருள் பெருகின வாரல் கோட்டுமா வாழங்கும் காட்டக நெறியே.

வெள்ள வரம்பின் ஊழி போகியும்

வெள்ள வரம்பின் ஊழி போகியும் கிள்ளை வாழிய பலவே ஒள்ளிழை இரும்பல் கூந்தல் கொடிச்சி பெருந்தோள் காவல் காட்டி யவ்வே.