ஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணை ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந் நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன. ஐங்குறுநூற்றில் அடங்கியுள்ள பாடல்களில் ஒவ்வொரு திணையைச் சேர்ந்த பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்படுள்ளன. மருதத் திணைப் பாடல்கள் (100) - ஓரம்போகியார் நெய்தல் திணைப் பாடல்கள் (100) - அம்மூவனார் குறிஞ்சித் திணைப் பாடல்கள் (100) - கபிலர் பாலைத் திணைப் பாடல்கள் (100) - ஓதலாந்தையார் முல்லைத் திணைப் பாடல்கள் (100) - பேயனார் வாழி ஆதன் வாழி அவினி வாழி ஆதன் வாழி அவினி வாழி ஆதன் வாழி அவினி வாழி ஆதன் வாழி அவினி வாழி ஆதன் வாழி அவினி வாழி ஆதன் வாழி அவினி வாழி ஆதன் வாழி அவினி வாழி ஆதன் வாழி அவினி வாழி ஆதன்வாழி அவினி வாழி ஆதன் வாழி அவினி மனைநடு வயலை வேழஞ் சுற்றும் கரைசேர் வேழம் கரும்பிற் பூக்கும் பரியுடை நன்மான் பொங்குளை யன்ன கொடிப்பூ வேழம் தீண்டி அயல மண்லாடு மலிர்நிறை விரும்பிய ஒண்தழைப்...